Friday, January 10, 2014

மது வெறியைவிட ஆபத்தானது மதவெறி, மிஸ்டர் மணியன்!



" திமுகவும் அதிமுகவும் வீதிதோறும் மதுவை ஓடவிட்டு இளைஞர்களையும் தமிழ்ச் சமூகத்தையும் சீரழித்துவிட்டன எனவேதான் பாஜகவை ஆதரிக்கிறேன் " எனத் தமிழருவி மணியன் கூறியிருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாவற்றிலும் மதுவிலக்குக் கொள்கை நடைமுறையில் இருக்கிறதா? 


மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கும் சௌஹான் இப்போது எடுத்திருக்கும் புரட்சிகர நடவடிக்கை என்ன தெரியுமா? சாராயம் விற்கும் கடைகள் எல்லாவற்றிலும் பிராந்தி விஸ்கி போன்ற IMFL மதுவகைகளையும் சேர்த்து விற்பதுதான்! மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது 2,737 சாராயக் கடைகளும் 937 IMFL மது வகைகள் விற்கும் கடைகளும் உள்ளன. சராசரியாக ஒரு லட்சம் மக்களுக்கு ஐந்து சாராய கடைகள்வீதம் அந்த மாநிலத்தில் உள்ளன. மது விற்பனையை அதிகரிக்கவே அந்த மாநில பாஜக முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். 


சத்திஸ்கரில் இந்த ஆண்டு 1900 கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 500 கோடி அதிகம். ரேஷன் அரிசியை விற்று அங்கே சாராயம் குடிக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 


குஜராத்தில் மதுவிலக்கு இருப்பதற்கு மோடி காரணம் அல்ல. அது காந்தி பிறந்த மாநிலம் என்பதே காரணம். பாஜக ஆட்சி அமைத்தால் நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ அளிப்பார்களா? மணியன் அந்த உறுதிமொழியைப் பெற முடியுமா? மணியன் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்: மதுவெறியைவிட ஆபத்தானது மதவெறி! காந்தியைக் கொன்றவன் ஒரு குடிகாரன் அல்ல! இந்துமத வெறியன்!

No comments:

Post a Comment