Thursday, January 2, 2014

மீனவர் பிரச்சனையில் திமுக அறிவிக்கப்போகும் நேரடி நடவடிக்கை என்ன?



தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கைக் கடற்படை இன்று கைது செய்திருக்கிறது. வலைகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த 29 ஆம் தேதி 22 மீனவர்களும் மறுநாள் 18 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இன்று கைது செய்யப்பட்ட 32 பேரை சேர்த்து கடந்த நான்கு நாட்களில் மட்டும் 62 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 


டீசல் விலை உயர்வை மத்திய அரசு அறிவிப்பதும் அதை எதிர்க்கட்சிகள் கண்டிப்பதும் எப்படி வாடிக்கையாகிவிட்டதோ அப்படியே இந்த விஷயமும் ஆகிவிட்டது. முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவார், கட்சிகளுக்கு அறிக்கை, ஊடகங்களுக்கு செய்தி- மீனவ மக்களுக்கோ இது உயிரின் வாதை. 


கடந்தமுறை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டபோது திமுக தலைவர் கலைஞர் அவர்கள் மிகுந்த கோபத்தோடு அறிக்கை விடுத்திருந்தார். இனி மத்திய அரசை நம்பிப் பயனில்லை. நேரடியாகப் போராட்டத்தில் இறங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் போராட்ட அறிவிப்புக்கான காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 


ஆமாம், தமிழ் இந்து ஏன் இந்தப் பிரச்சனையில் சும்மா இருக்கிறது? தமிழ்நாட்டு மீனவர்கள் செய்வது சரியல்ல என்று விக்னேஸ்வரனிடம் ஒரு பேட்டி எடுத்து வெளியிடலாமே! அவர் கிடைக்கவில்லையென்றால் திரு ராம் அவர்களிடமேகூட இன்னுமொரு பேட்டி எடுக்கலாம். 

No comments:

Post a Comment