Monday, June 29, 2015

மணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள்



வணக்கம்


மணற்கேணி இருமாத இதழ் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள்நிறைவடையப் போகின்றன.இதுவரை 29 இதழ்கள் வெளிவந்துள்ளன. 

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்துமுற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொருஅடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது .


சங்க இலக்கியச் சிறப்பிதழ்பேராசிரியர் கா.சிவத்தம்பிசிறப்பிதழ்வங்க இலக்கியச் சிறப்பிதழ்பாகிஸ்தான் இலக்கியச்சிறப்பிதழ்; தமிழும் சமஸ்கிருதமும்; செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழ் எனப் பல்வேறு சிறப்பிதழ்களை சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு தமிழ் ஆய்வுகளின் தரத்தை உயர்த்துவதற்கு உதவிவரும் மணற்கேணி கடந்த இரு இதழ்களாக பெண் எழுத்துகள் சிறப்பிதழாக பெண் இலக்கியவாதிகளையும் பெண் வரலாற்று அறிஞர்களையும் விரிவாக அறிமுகம் செய்துவருகிறது.  

கிரந்த யூனிகோடு பிரச்சனைபொருந்தல் அகழ்வாய்வின்முக்கியத்துவம் முதலானவற்றை தமிழ்ச் சிந்தனை உலகின்கவனத்துக்கு மணற்கேணி எடுத்துச் சென்றது

கவிஞர் சேரன்எம்..நுஃமான்.யேசுராசா,பா.அகிலன்,அனார்,லதா, லறீனா அப்துல் ஹக் முதலானோரின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டும்சிவா சின்னப்பொடியின் தன்வரலாற்றுத் தொடரை வெளியிட்டும்ஈழம் குறித்து கவனத்தை ஈர்த்து வருகிறதுஎம்.ஏ.நுஃமான் குறித்த சிறப்பிதழையும் கி.பி.அரவிந்தனின் நினைவைப் போற்றும் விதமாக சிறப்பிதழையும் வெளியிட்டிருக்கிறது.

பெண்களின் படைப்புகளுக்கான வெளியை விரிவுபடுத்தும்நோக்கோடு எழுத்தாளர் தேன்மொழியின் ஒருங்கிணைப்பில் ‘ஆயம்’ என்ற பகுதியில்அயல்நாடுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்மற்றும் நேர்காணலை வெளியிட்டுவருகிறதுஆங்கிலத்தில்வெளியான நேர்காணல்களைத் தமிழாக்கம் செய்துவெளியிடுவதே தமிழ்ச் சிற்றிதழ்களின் வழக்கம்ஆனால்மணற்கேணியில் வெளியான பாகிஸ்தான் எழுத்தாளர் செஹ்பாசர்வாரின் நேர்காணலின் ஆங்கில வடிவத்தை இந்தியாவின்முன்னணி நாளேடுகளில் ஒன்றான ’தி இந்து’ தனது ’லிட்டரரிரெவ்யூ’ பகுதியில் அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்றுவெளியிட்டது.

இது தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் பெருமைப்படத்தக்கதொருநிகழ்வாகும்.


திரு..அண்ணாமலைதிருமதி.வீ.எஸ்.ராஜம்பேராசிரியர்செ.வை.சண்முகம்பேராசிரியர் கி.நாச்சிமுத்துமுனைவர்விஜயவேணுகோபால்எம்..நுஃமான்பேராசிரியர்ராஜ்கௌதமன்,பேராசிரியர் வீ.அரசு,பேராசிரியர்.பஞ்சாங்கம்பேராசிரியர் பெ.மாதையன்,பேராசிரியர்கார்த்திகேயன்பேராசிரியர் இரா.கோதண்டராமன், பேராசிரியர் அ.ராமசாமி உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும்,அம்பை, கவிஞர்ஞானக்கூத்தன்இந்திரா பார்த்தசாரதி,தேன்மொழிஆசை,இமையம் உள்ளிட்ட படைப்பாளிகளும் மணற்கேணியில் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.


மொழிபெயர்ப்புகளின் வாயிலாக இதுவரை தமிழில்அறியப்படாதிருந்த எடுவர்டோ கலியானோஎலியா கனெட்டிபியர் பூர்தியூபர்ட்டன் ஸ்டெய்ன்ரணஜித் குஹாமுதலானோரின் சிந்தனைகளையும்எதுமோன் ழாபேஸ்நிக்கனோர் பர்ராஎதெல்பர்ட் மில்லர்அஃபூவா கூப்பர்உள்ளிட்டோரின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியதுமணற்கேணி

தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ செய்யவேண்டிய இந்தப் பணியை மணற்கேணி செய்துவருகிறது. ஆனால், மணற்கேணி இதழுக்கு சந்தாசெலுத்தி வாங்குவதற்குக்கூட இந்த நிறுவனங்கள் முன்வருவதில்லை. இலக்கியத்துக்கு அப்பாற்பட்டநிறுவனங்களின் விளம்பர உதவி இல்லாமல்இலக்கியத்தின்மீதும் தமிழ் ஆய்வுகளின்மீதும் மதிப்புகொண்ட நண்பர்களின்ஆதரவை மட்டுமே நம்பி மணற்கேணி நடத்தப்படுகிறது


மணற்கேணி இதழின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்தால்இது தொடர்ந்து சிறப்பாக வெளிவரவேண்டுமென நீங்கள்விரும்பினால்

மணற்கேணி புரவலர் :


மணற்கேணியின் புரவலராவதற்கு நீங்கள் ரூஐந்தாயிரம்செலுத்தவேண்டும்உங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குமணற்கேணி இதழ் அனுப்பிவைக்கப்படுவதோடு மணற்கேணிபதிப்பகத்தால் வெளியிடப்படும் நூல்கள் யாவும் விலையின்றிஅனுப்பிவைக்கப்படும்.


மணற்கேணி குழாம் :


மணற்கேணி குழாமில் சேர நீங்கள் ரூ.மூவாயிரம்செலுத்தவேண்டும்மூன்று ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ்அனுப்பப்படுவதோடு மணற்கேணி பதிப்பக வெளியீடுகள்விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


ஊருணி :


இந்தத் திட்டத்தின்மூலம் நீங்கள் நூலகங்களுக்கோபள்ளிகளுக்கோபடிப்பகங்களுக்கோ அல்லது நீங்கள் விரும்பும்ஒரு நபருக்கோ மணற்கேணியைப் பரிசளிக்கலாம்ரூ.ஆயிரம்செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு இதழ் அனுப்பப்படும்.


ஆண்டு சந்தா:


ரூ.420/- செலுத்தி சந்தாதாரர் ஆகிறவர்களுக்கு ஒரு ஆண்டுக்குஇதழ் எமது சொந்த செலவில் அனுப்பப்படும்.


தொகையைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் நீங்கள்நேரடியாகவே செலுத்திவிடலாம் :

Manarkeni Publication 

Overdraft account : 960114000000398

Syndicate Bank, Pondicherry Branch , IFSC Code : SYNB0009601

1 comment:

  1. வணக்கம் ஐயா, நாங்கள் எவ்வாறு இதழுக்கு கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும் என்ற தகவலை அறிந்து கொள்ள விரும்புகின்றோம். நன்றி ஐயா

    ReplyDelete