Sunday, September 6, 2015

எனது தமிழாசிரியர் திரு ஞானஸ்கந்தன்!





சிதம்பரம் ஶ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் நான் படித்தபோது எனக்கு பத்து, பதினொன்றாம் வகுப்புகளில் தமிழாசிரியராக இருந்தவர் திரு ஞானஸ்கந்தன். நடராஜர் கோயில் தீட்சதர் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கணத்தில் ஆழ்ந்த புலமைகொண்டவர். வகுப்பில் அவருக்குப் பிடித்த மாணவனாக நான் இருந்தேன். ஈற்றடியை எழுதிப்போட்டு வெண்பா எழுதச் சொல்வார். எல்லோருக்கும் முதலில் எழுதவேண்டும் அவரிடம் பாராட்டு பெறவேண்டும் என்ற துடிப்பில் மனம் பரபரக்கும். 

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிதம்பரம் கீழவீதியில் இருக்கும் அவரது வீட்டைத் தேடிச்சென்று அவரை சந்தித்தேன். என்னை அவருக்கு நினைவில்லை, ஆனால் அன்புடனும் பழைய மாணவன் ஒருவன் தேடிவந்து சந்திக்கிறானே என்ற பெருமிதத்துடனும் பேசினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை. 

எனக்கிருக்கும் தமிழ்ப் பற்றுக்குக் காரணமானவர்களில் தமிழாசிரியர் திரு ஞானஸ்கந்தன் அவர்களும் ஒருவர். அவரை வணங்குகிறேன்! 


No comments:

Post a Comment