Wednesday, July 8, 2015

பாமாவின் சிறுகதைத் தொகுப்பு



பாமாவின் 25 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்றை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கொண்டாட்டம் என்ற தொகுப்பில் வெளியான 20 கதைகளோடு ஐந்து புதிய கதைகளைச் சேர்த்து இந்தத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. 

பாமா பிறந்த ஊரின் வட்டார வழக்கு சில கதைகளிலும் பணியாற்றும் உத்திரமேரூரின் வட்டார வழக்கு சில கதைகளிலும் கையாளப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தலித் இலக்கியம் எப்படி இருக்கவேண்டுமென தலித் அல்லாத காருண்யவான்கள் ஆசைப்பட்டார்களோ அதற்குப் பொருத்தமான கதைகள். தலித்தியம் பெண்ணியம் சூழலியம் எனப் பல்வேறு இஸங்களுக்கு உதாரணங்களாக சொல்லக்கூடிய கதைகள். மானுடவியல் ஆய்வாளர்களுக்கு உதவக்கூடிய தலித் வாழ்க்கை குறித்த விவரணைகள். வலி, எள், அந்த, இழப்பு முதலான கதைகளை தலித் ஸ்டீரியோடைப் எனக் கூறலாம். 

துர்காவும் நானும், அம்மாவுக்குப் புரிந்தது ஆகிய கதைகளில் பாமா கொஞ்சம் கதை சொல்ல முயன்றிருக்கிறார். தவுட்டுக் குருவி கதை கே.ஏ.குணசேகரன் பாடும் ஆக்காட்டி ஆக்காட்டி என்ற ஒப்பாரிப் பாடலை நினைவுபடுத்துகிறது. 

இந்தத் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் தலித் இலக்கியத்தின் மாதிரியாக முன்வைக்கப்படலாம். மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஆங்கிலப் பதிப்பாளர்களுக்கும்  இந்தத் தொகுப்பு நிச்சயம் பிடிக்கும். 

No comments:

Post a Comment