Friday, April 15, 2011

நரிக்குறவர்கள் காட்டிய நன்றி




நரிக்குறவர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தி அதை அமைக்கச் செய்தவன் நான். அதை அந்த மக்கள் நன்றியோடு மனதில் வைத்திருக்கிறார்கள். எனது காட்டுமன்னார் கோயில் தொகுதிக்கு உட்பட்ட குமாரக்குடி பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு வாக்கு சேகரிக்கச் சென்றிருந்தேன். அந்த மக்கள் எனக்கு அளித்த வரவேற்பும் காட்டிய ஆதரவும் நெகிழ வைத்தன.


ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருக்கும் அவர்களின் குடியிருப்புக்குப் போயிருந்தபோது அங்கு ஒரு சிறப்புப் பல்ளியைத் துவக்கவேண்டுமெனக் கேட்டார்கள். எனது முயற்சியால் ஏற்கனவே வடலூரில் இருக்கும் நரிக்குறவர் குடியிருப்பில் சிறப்புப் பள்ளி ஒன்று துவக்கப்பட்டு அது சிறப்பாக நடந்துவருகிறது. அதை அறிந்த காரணத்தால்தான் ஸ்ரீமுஷ்ணத்தில் பள்ளி வேண்டுமென அவர்கள் கேட்டார்கள். வெற்றி பெற்றால் செய்யவேண்டிய பணிகளில் முதன்மையானதாக அதை நான் மனதில் குறித்து வைத்திருக்கிறேன்.

1 comment: