Monday, January 19, 2015

ரஜினி கோத்தாரி காலமானார்

 

சிந்தனையாளர் ரஜினி கோத்தாரி (1928-2015) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். CSDS, PUCL ஆகிய அமைப்புகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். செயல்பாட்டாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் பாலமாக இருந்த Lokayan அமைப்பைத் தோற்றுவித்தவர். சிலகாலம் திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர். 
சாதி மதம் குறித்த கவனிக்கத்தக்க ஆய்வுகளைச் செய்தவர். 

PUCL அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். தர்மபுரியில் போலி என்கவுண்டர்களில் நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பேராசிரியர் ரஜினி கோத்தாரியும் தோழர் எஸ்விஆரும் தான் வழக்கு தொடுத்தனர். 

இந்திய சிவில் உரிமை இயக்க வரலாற்றிலும், சிந்தனையாளர்களின் வரிசையிலும் எப்போதும் நினைவுகூரத்தக்கவர் பேராசிரியர் ரஜினி கோத்தாரி. அவருக்கு என் அஞ்சலி. 

No comments:

Post a Comment