Showing posts with label media. Show all posts
Showing posts with label media. Show all posts

Friday, March 16, 2012

'Dalit' and SC commission - Ravikumar

2008 ஆம் ஆண்டில் 'தலித்' என்ற சொல்லை அரசாங்க அலுவல் சார்ந்த பதிவுகளில் பயன்படுத்தக்கூடாது என தேசிய எஸ்.சி./ எஸ்.டி கமிஷன் கடிதம் ஒன்றை அனுப்பியபோது ஆங்கில நாளேடு ஒன்றின் ஆசிரியர் ஒருவர் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருந்தார். அவருக்கு நான் அனுப்பிய விளக்கம் இது. 


16.06.2008



           It is true that the National SC/ST commission has suggested that the word  Dalit not be used in official communication and a few state governments have acted on this. The commission's view is that the term is 'unconstitutional'. What we must realize is that the Constitution is not a lexicon. It cannot delimit social and cultural usage. In the US, the term negro was used for a long time to refer to blacks. Today, African American is used by every one. In India, the bureaucracy and administration have to keep pace with the times. The use of the official term Scheduled Castes does not in any way clash with the social/ academic/ literary/ media use of the term Dalit. The two are independent. Some observations in this context.

  1. Statutes are enacted to maintain law and order not to interfere in the affairs of language. So looking at the statutes to decide the fate of a word is incorrect.
  2. The SC/ST commission's directive is only meant for 'the official documents' not for the media or literature or rest of society.
  3. Dalit leaders have used many words to call themselves. Pandit  Iyothee Thass(1845-1914) a leader of Tamil dalits had used "casteless Dravidians" and "Original Buddhists". He criticized the usage of the word 'Depressed Class' in his writings.
  4. Ambedkar used several words -- Depressed Class, Untouchables and Minorities, and also on a few occasions the term 'Dalit'.
  5. A well known scholar of the Dalit movement and literature Eleanor Zelliot has stated in her introduction to Vasant Moon's autobiography 'Growing up Untouchable in India': "The most recent nomenclature for ex-untouchables is 'dalit'; a term meaning downtrodden or broken down but used with pride as self-chosen name that reflects no idea of pollution and can include all who identify themselves as oppressed by the caste system.' Dalit' came into currency in the 1970s in movements that took names such as Dalit Panthers and Dalit literature and now is the preferred name for those (such as Vasant Moon) who want to free themselves from the concept of pollution and from the patronage of Gandhian ideology". So the etymological meaning of the word 'Dalit' is not important here as much as its functional meaning.
  6. It is a 'subjectivity' chosen by those who want to annihilate caste system; it is not an 'identity'. Choosing subjectivity is a conscious act. But the Hindu caste system wants to reduce the subjectivity into an identity by making the word as a mere replacement for Scheduled Caste or Untouchable.
  7. So we have to restrict the instruction of the SC commission to official documents of the central/state governments.
  8. We must oppose any attempt to ban the word 'Dalit'.
  9. At a time when the Australian prime minister apologized to the nation for the atrocities perpetrated on the aborigines, and at a time when in Canada the state has apologized for the oppressive policies Native Americans (First Nation people) were subjected to till as late as the 1970s, we in India seem to be involved to be quibbling over non-substantive issues.

ஊடக அரசியல் : கன்ஷிராமின் மரணமும் இந்து நாளேடும்





பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் இறந்தபோது அதை இந்து நாளிதழ் முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடவில்லை. அதைப் பார்த்ததும் உடனே இந்து நாளிதழின் ரீடர்ஸ் எடிட்டருக்கு கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பினேன். அடுத்த நாள் முதல் பக்கத்தில் கன்ஷிராம் குறித்த செய்தி வெளியிடப்பட்டது. எனக்கு அப்போது ரீடர்ஸ் எடிட்டராக இருந்த திரு . நாராயணன் கடிதம் ஒன்றை எழுதினார். நான் அவருக்கு பதில் எழுதினேன். எனது கண்டனத்தையும் அதையொட்டி இந்து நாளிதழ் எடுத்த நடவடிக்கைகளையும் பின்னர் அவர் இந்து நாளிதழில்  பதிவு செய்தார். தலித் பிரச்சனைக்காக மீடியாவுடன் நான் நடத்திய போராட்டங்களில்  இதுவும் ஓன்று . 

1.

From: ravi kumar <kmkoilmla@gmail.com>

Date: Oct 10, 2006 2:22 PM
Subject: Kanshi Ram in "The Hindu" social order

K. Narayanan
The Readers' Editor
The Hindu
readerseditor@thehindu.co.in


    Kanshi Ram in "The Hindu" social order
Dear Mr Narayanan

I read with dismay this morning's Chennai edition of The Hindu (10 October 2006). I was saddened to find the news of BSP founder-leader Kanshi Ram's death buried at the bottom of Page 14. Not only was it relegated from Page 1, it was given the lowest status on Page 14, perhaps symbolic of the status dalits are meant to enjoy in "The Hindu social order".

True, news priorities are relative and change every day, and North Korea's nuclear test received priority and occupied a lot of space in most TV bulletins and national newspapers. But national bulletins and newspapers did not jettison Kanshi Ram from the prime time slot/ Page 1. Surely, The Hindu could have made space for Kanshi Ram's death on its front page, and carried a detailed report inside. What made it worse was that the newspaper, which prides itself on balanced and objective reporting, could not rustle up an obituary for a man who was unarguably the greatest leader to emerge from among Dalits after B.R. Ambedkar. (Kanshi Ram had died early on the morning of 9 October and there was ample time to ready an obit.)

A comparison of the coverage of recent prominent deaths by The Hindu would offer a sobering perspective on some unconscious prejudices the newspaper seems to nurture. When the CPI(M) politburo member Anil Biswas died, there was a two-column front-page report in the 27 March 2006 edition. A detailed obit followed in the national page inside. Perceptions may differ, but the national significance of Kanshi Ram was certainly greater than that of Biswas. But The Hindu chose not to carry even a proper file picture of Kanshi Ram; the 'newspaper of record' merely recorded Kashi Ram's death. Secondly, filmmaker Hrishikesh Mukherjee's death was reported with more care, and an obit was featured in the op-ed page (29 August 2006). One could offer more examples, but these should suffice for now.
There are many reasons why Kanshi Ram should not have been ignored the way The Hindu chose to ignore him. Having launched the Bahujan Samaj Party in 1984, he ensured that within 10 years it gained the status as a national party in the Election Commission's nomenclature. Though dubbed by the media as a dalit leader, he was the leader of the larger society. The very name he chose for his party—Bahujan Samaj—indicated that it sought to represent the 'oppressed majority', a distinct echo of Jotiba Phule's legacy. With this philosophy, he succeeded in placing the BSP as the third biggest national force next to the Congress and the BJP. This bespoke of his organaisational abilities and this was something even the Left parties did not achieve. Such a man certainly deserved more space than what The Hindu deemed was apt for him.

D. Ravikumar
MLA, Viduthalai Chiruthaikal Katchi
Tamil Nadu

Address:
B-1B, MLA Hostel
Government Estate, Chepauk
Chennai  600 005

=============================================================================
2.

From: readerseditor@thehindu.co.in < readerseditor@thehindu.co.in>
Date: Oct 11, 2006 4:51 PM
Subject: Re: kanshiram
To: ravikumar pondicherry <adheedhan@gmail.com >


Dear Mr. Ravikumar,

Thank you for a detailed note of anguish.

Obviously you did not notice Kanshi Ram's picture with the headline
"Kanshi Ram passes away" on Page 1, just below the masthead, what are
pointers to the most important stories inside.

The news was prominently displayed in a four-column spread. It should
have been on top of the page. This was an error of judgment, which
does happen in a newspaper at times. What was really missed was a
detailed obituary.

This has been more than made up today by the long assessment (Op-Ed
page) of the phenomenon that Kanshi Ram was, and also an editorial.

What is really uncharitable, as far as The Hindu is concerned, is your
comment that this was "symbolic of the status dalits are meant to
enjoy." This paper, I feel, has always been sympathetic to the Dalit
cause.

K. Narayanan
The Readers' Editor,
The Hindu,
Kasturi Buildings,
859 -- 860 Anna Salai,
Chennai 600 002
India

Ph: +91-44-28418297 (11 a.m. to 5 p.m., Monday to Friday)
Fax: +91-44-28552963
Email: readerseditor@thehindu.co.in
=============================================================================

3.

Dear Mr. Narayanan

Thank you for the prompt response.

As you rightly admit there was an error in judgement in placing the Kanshi Ram report at the bottom of the page. I hope you will convey this to scores of readers who have been similarly anguished in your Monday column where you reflect at length on readers' concerns.

I did appreciate the article by Harish Khare in the Op-Ed page (11 October 2006). It was perhaps one of the best analysis published so far.

Let me also place on record the fact of my appreciation for The Hindu's reportage of issues related to Dalits in general. The Hindu has had a historical role in this. When the then collector of Chengelpet, H. Tremenheree, submitted his report in 1891,
"Note on the Paraiahs of Chingleput," he cited two reports from The Hindu of that period to substantiate his claims about the condition of parayars in certain districts of Madras Presidency. That legacy has been sustained by the writings of P Sainath.

Allow me use this opportunity to convey a few related concerns. It is a matter of fact that few dalits seem to be employed by the mainstream media. This was admitted in an article by Siddharth Varadarajan in your newspaper ("Caste matters in the Indian media", 3 June 2006) and was borne out by a survey conducted by CSDS in May 2006. The Hindu should be no exception.

At best, The Hindu, with its concern for social justice, could at least carry the opinions of Dalit writers, scholars and academicians in its editorial and op-ed pages.

sincerely
Ravikumar

D.RAVIKUMAR
B-1 B MLA Hostel
Govt Estate, Chepauk
Chennai 600 005
Mobile: 93454 19266
=============================================================================-
4.

Immediacy, proximity are keys to news selection                                                  

Monday, Nov 20, 2006

K. NARAYANAN

readerseditor@thehindu.co.in


http://www.hindu.com/2006/11/20/stories/2006112002781100.htm
                                                  
                                          
The way Kanshi Ram's passing was reported (October 10, 2006) drew a sharp comment from D. Ravikumar, MLA, Chennai. He was "dismayed and saddened by the way the news was buried at the bottom of Page 14." What made it worse, according to him, was that the paper "could not rustle up an obituary" for the "greatest Dalit leader after Ambedkar." He compared this with the way the death of CPI (M) leader Anil Biswas and filmmaker Hrishikes Mukherjee was reported.

The complaint had some basis and an error too. Kanshi Ram, and his picture, did find a place on Page 1, at the very top in the promos indicating the most important news inside. But the paper erred in not carrying an obituary note (the long report contained only tributes) and in placing the story at the bottom of a page. I made this point both to the Chief News Editor and Ravikumar. But The Hindu more than made up for this the next day with a highly appreciative editorial and an assessment of the Kanshi Ram saga by Harish Khare. M.P. Umesh Chandra of Mangalore called Khare's essay a "very meaningful and beautiful tribute", which "aptly and genuinely captured the significance of Kanshi Ram." He said it showed The Hindu was "committed to [the] ethical principle of content diversity."

Ravikumar acknowledged this in his reply to my note, and expressed appreciation of The Hindu's reportage of issues related to Dalits. The Dalit Panthers of India MLA, who is also associated with Navayana, a publishing house specialising in literature relating to Dalits, raised a "related concern" of "few Dalits employed by the mainstream media." This is too complex and sensitive an issue to be taken up here but I would like to make one point. From 1978 to 1990, when I was involved in the selection of editorial staff — in which caste and creed played no part and merit was the only consideration — there was not a single SC/ST applicant.

Thursday, September 15, 2011

பரமக்குடி: குரலற்றவர்களின் குரலாக இருப்போம் - சிவா சின்னப்பொடி



 பரமக்குடி சம்பவத்தை முன்வைத்து ஊடக ஜனநாயகம் பற்றி ஒரு விவாதத்தை நீங்கள் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
'பரமக்குடி சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துவிட்டன.அல்லது திசை திருப்பி செய்தி வெளியிட்டுவிட்டன.ஆளும் வர்க்கத்தின் குரலையே இந்த ஊடகங்கள் எப்போதும் பிரதிபலிக்கின்றன.பார்ப்பனிய  ஆதிக்கம் என்று காலகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வந்த தமிழ் ஊடகப்பரப்பில் இன்று அவர்கள் ஓரங்கட்டப் பட்டு தமிழ் தேசிய முதலாளிகள் அல்லது தரகு முதலாளிகள் அவர்களின் இடத்தை பிடித்துவிட்ட நிலையில் அடித்தட்டு மக்களுக்கு எதிரான ஊடகக் கருத்தியல் வன்முறை தொடர்கிறது. தமிழ் ஊடகப் பரப்பில் ஜனநாயகம் இல்லை.என்பது போன்ற எண்ணம் அல்லது குற்றச்சாட்டு பலரிடம் இருக்கிறது.'

இன்றைய உலகமயமாதல் சூழலில் ஊடகம் என்பதே ஐனநாயக விரோத வடிவமாக இருக்கும் போது அதற்குள் எப்படி ஜனநாயகத் தன்மையை எதிர்பார்க்க முடியும்? என்பது முக்கியமானதொரு கேள்வி. சந்தைக்கான உற்பத்தி என்பது பின்தள்ளப்பட்டு உற்பத்திக்கான சந்தையை திட்டமிட்டு உருவாக்குவது என்பது முதன்மைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் தனிமனிதனுடைய கருத்தில் தளத்தில் அத்துமீறி நுழைந்து அவனை புதிய தயாரிப்புக்களுக்கான நுகர்வோனாக மாற்றுகின்ற வேலையைத் தான் ஊடகங்கள் செய்கின்றன.ஊடகம் என்பது மக்களுக்கானது மக்களுடைய குரலைப் பிரதி பலிப்பது என்பதெல்லாம் இன்று காலாவதியாகிப் போன வார்த்தைகளாகும்.

பல்தேசிய கம்பனிகளின் அல்லது உலகப் பெருமுதலாளித்துவத்துவத்தின் தேவைகளுக்கு அல்லது நலன்களுக்கு மக்களை தயார்படுத்துகின்ற பொறிமுறை அமைப்புக்களாகத்தான் இன்றைய ஊடகங்கள் இருக்கின்றன.

இங்கே மேற்குலகிலே ஊடகங்களின் கருத்தியல் வெளிப்பாட்டு முறையென்பது
நேர் கோட்டுமுறை
சமாந்தரமுறை
ஊடறுக்கும் முறை
சமூகப் பிரதிபலிப்பு முறை
என்கின்ற நான்கு அடிப்படைகளை கொண்டிருக்கின்றன. உள்ளதை உள்ளபடி சொல்வதாக சொல்லிக் கொள்ளும்  நேர்கோட்டு முறையும் (தினத்தந்தி, மாலை முரசு என்பன) எதிரெதிர் முரண்பாடுகளை கட்டமைத்து இருதரப்பு கருத்துக்களையும் நடுநிலைமையாக சொல்லிக் கொள்ளும் பிபிசி பாணியாலான (ஹிண்டு, இந்தியா ருடே, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ்) சமாந்தர முறையும்,எதிரெதிர் முரண்பாடுகளை கட்டமைத்துச் சென்று ஒரு முக்கிய திருப்பத்தில் ஒரு தரப்பை நிராகரித்து மறுதரப்பை நேரடியாகவே மறைமுகமாவோ நியாயப்படுத்தம் சிஎன்என் என்பிசி முதலான அமெரிக்க ஊடகங்கள் பின்பற்றும் ஊடறுக்கும் முறையும்(சண்குழுமம் மற்றும் அதிமுக சார்பு ஊடகங்கள் உட்பட அனைத்து அரசியில் கட்சி சார்பு ஊடகங்கள்  தினமலர் முதலானவை பின்பற்றும் முறை) தமிழகத்திலே இருக்கிறது.
ஆனால் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மனச்சாட்சியாக குரலற்றவர்களின் குரலாக இருக்கக் கூடிய சமூகப் பிரதிபலிப்பு முறையிலான ஊடகங்கள் அதாவது ஒரு செய்தியின் செய்திப் பெறுமதியை தான் சார்ந்த மக்கள் தளத்தில் அல்லது சமூகத்தளத்தில் வைத்துப் பார்க்கும் அல்ஜசீரா போன்ற ஊடகக் கட்டமைப்பு  தமிழகத்தில் இல்லை.

பரமக்குடி கலவரமும் துப்பாக்கி  சூடும் சமூகப் பிரதிபலிப்பு முறையை கையாழும் ஒரு ஊடகத்துக்குத்தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். ஏனைய முறைகளை கையாளும் ஊடகங்களுக்கு பரமக்குடி சம்பவத்தைவிட அஜித்தினுடைய மங்காத்தா படம் எவ்வளவு வசூலைக் குவித்தது இன்றைய நிலவரப்படி அது இன்னும் எவ்வளவு வசூலைக் குவிக்கும் என்பதே முக்கியமானதாகவும் அவர்களது வங்கியிருப்பை நிரப்புவதற்கு தேவையானதாகவும் இருக்கும்

இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு எங்களுக்கென்று சமூகப் பிரதிபலிப்பு முறையிலான ஊடகங்களை நாங்கள் உருவாக்காதவரை அவ்வாறு உருவாகும் ஊடகங்களை ஊக்குவிக்காதவரை எதுவுமே மாறப் போவதில்லை.

அடுத்து இந்தியாவிலுள்ள ஆதிக்க ஊடகங்களில் தலித்துகளுக்கு இடம் இருப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் மறுபக்கம் பார்த்தால் தலித்துக்கள் அதிக்க சக்திகளுக்கு துணைபோகும் ஆதிக்க ஊடகவியலாளர்களாக உருவாகாமல் இருப்பது அல்லது உருவாக்கப்படாமல் இருப்பது சிறந்தது.

( ஊடகத் துறையில் பணியாற்றும் இக் கட்டுரையாளர் ஈழத்தைச் சேர்ந்தவர் , தற்போது பாரீசில் வசிக்கிறார் )

Wednesday, September 14, 2011

எழுதா எழுத்து


எழுதா எழுத்து - என்ற எனது பழைய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி :





நூறு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகளை நடத்தி நூல்களைப் பதிப்பித்து தனி முத்திரையைப் பதித்த தலித்களின் இன்றைய நிலை என்ன?  ஆறுகோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் சர்க்குலேஷனைக் கொண்ட இந்திய நாளிதழ்களில் அவர்களின் எவ்வளவுபேர் பணியாற்றுகின்றனர்?  இதுபற்றி அரசியல் விஞ்ஞானியான ராபின் ஜெஃப்ரி குறிப்பிட்டுள்ளதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருந்தும்:
“இந்திய மொழி செய்தியேடுகளைப் பற்றிக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்துவருகிறேன்.  இருபது வாரங்களுக்கு மேல் பயணம் செய்த, இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் தங்கி டஜன் கணக்கான பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்றுள்ளேன்.  250க்கும் மேற்பட்டவர்கள¬ப் பேட்டி கண்டிருக்கிறேன்.  இதுவரைக்கும் நான் மைய நீரோட்ட பத்திரிகைகளில் பணியாற்றும் தலித் பத்திரிகையாளர் ஒருத்தரையும் சந்தித்ததில்லை.  இதில் தலித் பத்திரிகை ஆசிரியர், தலித் பத்திரிகை உதிமையாளரைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.  என்னுடன் பணியாற்றும் நண்பரான ஆலிவர் மெண்டல்ஷோன் ஒரு தகவலைத் தந்தார்.  கர்னாடகாவில் டெக்கான் ஹெரால்டு, ப்ரஜாவாணி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவரும் அதன்பிறகு1985ல் சங்காதி (Suddi Sangaati) என்ற வாரப்பத்திரிகையை ஆரம்பித்தவருமான இந்துதாரா ஹொன்னபுரா என்ற தலித் பத்திரிகையாளரைப் பற்றிச் சொன்னார்.  அந்த வாரப்பத்திரிகை 1987ல் 44 ஆயிரம் பிரதிகள் விற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.21
இந்திய மக்கள் தொகையில் கால்பங்கினராக இருந்தபோதிலும், தினசரிகளில் ரிப்போர்ட்டர்களாகவோ, சப்&எடிட்டர்களாகவோ ஒரு தலித்தும் இல்லை எனக் கூறும் ராவின் ஜெஃப்ரி, “தலித்துகள் நடத்துகிற நாளேடு ஒன்றுகூட இல்லை.  அவர்கள் நடத்தும் தலித் பத்திரிகைகளோ சிறு பத்திரிகைகளாக, இலக்கியத்துக்கு அதிக அழுத்தம் தருபவையாக, வரையறைக்குட்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துபவையாக அவற்றை உற்பத்தி செய்யும் வட்டத்தைத் தாண்டி மற்றவர்கள் அறியாதவையாக உள்ளன” என்கிறார்.  அவர்  சந்தித்த ஒரேயொரு தலித் பத்திரிகையாளர் டி.எஸ். ரவீந்திரதாஸ்.  அவர் சென்னையில் இருப்பவர்.  தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ) தலைவரான அவர் எந்தவொரு வணிகப் பத்திரிகையிலும் பணியாற்றியது இல்லை.  800 உறுப்பினர்களைக் கொண்ட அந்த சங்கத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பது மற்றவர்களுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“இந்திய பத்திரிகையாளர்கள் எவரிடமாவது, தலித் பத்திரிகையாளர் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டால் “எனக்கு இரண்டொருநாள் அவகாசம் தரமுடியுமா?” என்றுதான் பதில் வரும்.” என்று குறிப்பிடும் ஜெஃப்ரி இந்தியாவின் மிகப்பெரிய நாளிதழான மலையாள மனோராமாவில் ஒரு சில தலித்துகள் இருப்பதாகவும் ஆனால் அவர்கள் சிறிய வேலைகளில்தான் உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.  ஆப்ரிக்க & அமெரிக்கர்கள் என அழைக்கப்படும் கறுப்பின மக்கள் குறித்த செய்திகளுக்காக அமெரிக்க பத்திரிகைகள் 1920கள் முதற்கொண்டே தனிக்கவனம் செலுத்தி வந்துள்ளன.  அத்தகைய நடவடிக்கை இங்கு அவசியம் என்பதை இந்திய பத்திரிகைகள் உணரவே இல்லை என்கிறார் அவர்.
அமெரிக்காவின் மக்கள் தொகையில் கறுப்பின மக்கள் 13 சதவீதம் உள்ளனர்.  அதைவிட அதிகமான சதவீதத்தில் தலித்துகள் இருந்தபோதிலும் இந்திய நிலைமை அமெரிக்க நிலைமைக்கு நேரெதிராக உள்ளது.  அமெரிக்காவில் கறுப்பினத்தவர் 1827ல் பத்திரிகையை ஆரம்பித்துள்ளனர்.  ஏறத்தாழ அதே காலத்தில் இங்கும் தீண்டாதார் பத்திரிகை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகம்.  1891 வாக்கில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் கறுப்பினத்தவரால் நடத்தப்பட்டுள்ளன.  வர்த்தகத் துறையில் ஈடுட்ட கறுப்பினத்தவரும் கிறித்தவ மதப் பிரச்சார பணியில் ஈடுபட்டு வந்த கறுப்பர்களுமாக இரு தரப்பினரிடமிருந்து பத்திரிகைகள் வெளியாகியுள்ளன.  இந்தியாவிலோ கறுப்பினத்தவரைப் போல தலித்துகளுக்கு மத அமைப்புகளோ, கல்வி அமைப்புகளோ இல்லை என்கிறார் ஜெஃப்ரி.  ஆனால் அயோத்திதாசர் அந்த இரண்டையும் உருவாக்கினார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் நாளேடுகளாக இருக்கும் தினமலர், தினகரன், தினத்தந்தி முதலியவற்றில் தலித்துகள் பத்திரிகையாளர்களாக உள்ளார்களா என்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.  தினத்தந்தி பெரும்பாலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த நாடார்களையே தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் பத்திரிகையாளர்களாக அனுப்பிவருகிறது.  தினகரனும் கூட அப்படித்தான்.  தினமலர் நாளேட்டில் அவ்வப்பகுதிகளைச் சேர்ந்த எண்ணிக்கை பலம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
தலித் பத்திரிகையாளர்கள் பற்றி கேட்டபோது, “அது ஒரு பிரச்சினையே அல்ல.  ஒருத்தரை நியமிக்கும்போது நாங்கள் அவரது சாதி என்னவென்று கேட்பதில்லை... அவர்களில் தலித்துகள் எவ்வளவுபேர் என்பது சரியாகத் தெரியாது.  ஆனால் நிச்சயம் சில தலித்துகள் இருக்கக்கூடும்“ என்று தினகரனின் மேனேஜிங் எடிட்டர் ரி. குமரன் கூறியுள்ளார்.  (18-01-1999) தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தியு-ம் இதே போன்றுதான் பதிலளித்துள்ளார்.  “ஆமாம், நிறையபேர் இங்கு இருக்கிறார்கள் அச்சிடும் இடத்தில்,,,,, எட்டிடோரியல் சைடிலும் சிலர்.... இரண்டு மூன்றுபேர்... இருக்கலாம்.  நாங்கள் சாதி அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை.  அதுமாதிரியான விஷயங்களில் எனக்குக் கவலையுமில்லை.  தகுதி. திறமை இவைதான் எனக்கு முக்கியம்” என்று அவர் கூறியுள்ளார் (19-01-1999) தினமணி ஆசிரியர் இராம. திரு. சம்பந்தம் தனது பத்திரிகையில் ஒரு போட்டோகிராபரும், ஒரு சப்&எடிட்டரும் தலித்துகள் எனப் பெருமையோடு கூறியிருக்கிறார் (19-01-1999) இந்தத் தகவல்கள் யாவும் ராபின் ஜெஃப்ரியின் கருதுகோளை நிரூபிக்கும் விதமாகவே உள்ளன.
புதுதில்லியில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்களில் (Acredited to PIB) ஒருத்தர் கூட தலித் இல்லை என்பது மிகவும் அதிர்ச்சிதரும் தகவலாக பி.என். உனியாலுக்கு இருந்தது.  அவர் இதுபற்றி “பயனீர்” நாளேட்டில் (16-11-1996) எழுதியதைத் தொடர்ந்து, தலித் சிந்தனையாளர்களான சந்த்ரபான் பிரசாத் மற்றும் ஷியோராஜ் சிங் பெச்சாய்ன் இருவரும் சேர்ந்து கோரிக்கை மனு ஒன்றை எடிட்டர்ஸ் கில்டுக்கும், ப்ரஸ் கவுன்சிலுக்கும் அளித்தனர்.  அமெரிக்காவின் அனுபவத்தைப் பின்பற்றி இந்தியாவில் தலித் பத்திரிகையாளர்களை நியமிக்கவேண்டும்.  2005 ஆண்டை விட அதற்கான இலக்காக நிர்ணயிக்க வேண்டும்“ என அவர்கள் அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.  அதற்குப்பிறகு ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் அது பற்றி இந்திய பத்திரிகை முதலாளிகளோ, பத்திரிகை அமைப்புகளோ கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.  அந்த நிலையிலும் ஒரு மாற்றமும் நிகழவில்லை.
இந்தியாவில் வெளியாகும் பத்திரிகைகளில் கணிசமானவை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகின்றன.  நாளேடுகளைப் பொருத்தவரை பிராமண ஆதிக்கம் அகற்றப்பட்டு எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன.  காட்சி ஊடகத்தை எடுத்துக்கொண்டாலும் அதுவே உண்மை.  ஆனால் மற்ற மாநிலங்களை விடவும் கேடான நிலையைத்தான் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் கடைப்பிடித்து வருகின்றன.  அவர்களைப் பொருத்தவரை சமூகநீதி என்பது சாதி நீதியாகவே உள்ளது.