Monday, January 11, 2016

எதல்பர்ட் மில்லர் கவிதைகள்


தமிழில் : ரவிக்குமார்

1.
போராடுகின்றன கறுப்பு முகங்கள்
மாற்றம் என்பது நீலவானம் அல்ல
சூரியனை மறைக்கின்றன வெள்ளைக் கரங்கள்

2.
நாங்கள் சாகிறோம் சிறிய அறைகளில்
இலைகள் வீழ்ந்துகொண்டேயிருக்கின்றன தரையில்
வசந்தத்தை நேசிக்கிறது நோய் 

3.
உடைகளைக் களைகிறது குளிர்காற்று 
சோகம் என்பது தனிமை
பூங்காவில் ஒரு முதியவர்

4.
அழுது புலம்புங்கள் எனக்காக
ஆறுதல்படுத்தட்டும்
பாடல்
மரணத்தைப்போல் மிதப்பது ஏதுமில்லை

No comments:

Post a Comment