Tuesday, January 5, 2016

தி இந்து நாளேட்டின் புதிய ஆசிரியர் திரு சுரேஷ் நம்பத் அவர்களுக்கு வாழ்த்துகள் !



தி இந்து நாளேட்டின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றிவந்த மாலினி பார்த்தசாரதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
புதிய ஆசிரியர் நியமிக்கப்படும்வரை திரு சுரேஷ் நம்பத் ஆசிரியப் பொறுப்பில் தற்காலிகமாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.அவர் இதழியல் துறையில் நீண்ட அனுபவமும் முற்போக்கு மனோபாவமும் மதச்சார்பின்மையில் பற்றும் கொண்டவர். அவரே நிரந்தர ஆசிரியராக நியமிக்கப்பட  என் வாழ்த்துகள் ! 

கடந்த ஒராண்டாக்கு முன்னர் மாலினி பார்த்தசாரதி ஆசிரியராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அந்த நாளேட்டில் பணியாற்றிவந்த பி.சாய்நாத் உள்ளிட்ட பல மூத்த பத்திரிகையாளர்கள் பதவி விலகினர். தமிழ்நாட்டிலும்கூட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டு அதிருப்தியடைந்தனர். அரசியல் செய்திகளைத் தருவதில் முதிர்ச்சியும் தெளிவான பார்வையும் சமூகப் பொறுப்பும் கொண்ட சிலர் ஃப்ரண்ட்லைனுக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால் இளம் பத்திரிகையாளர்களை ஊக்குவிப்பதில், முக்கியமான தலையங்கங்களை அடையாளம் காண்பதில், பிற ஊடகங்களைவிட வித்தியாசமான  செய்திகளை முந்தித் தருவதில் அவர் ஆர்வம் காட்டினார் என்பதையும் மறுக்க முடியாது. 

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. தமிழில்
காட்சி ஊடகங்கள் யாவும் கட்சி ஊடகங்களாக இருக்கும் சூழலில்  ஆங்கில நாளேடுகளே ஒப்பீட்டளவில் நடுநிலையோடு செய்திகளை வெளியிடுகின்றன. மக்களின் அரசியல் நிலைபாட்டை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் ஒரு நாளேட்டில் நடைபெற்றிருக்கும் இந்த மாற்றம் கவனத்துக்குரியது. இது தமிழ்நாட்டின் நலனுக்கு உதவும்விதமாக இருக்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு

No comments:

Post a Comment