Sunday, August 28, 2011

தாய்த் தமிழ்ப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்



சுதந்திர தினத்தை கல்வி வளர்ச்சி நாளாகத் திண்டிவனம் ரோசனை பகுதியில் அமைந்திருக்கும் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கொண்டாடினார்கள். அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினேன். விழாவை மிகவும் சிறப்பாக  ஆம் தேதி ஒருங்கிணைத்திருந்தார் பேராசிரியர் கல்யாணி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்டு 17 ஆம் தேதி அந்தப் பள்ளியில்  பயிலும் மாணவர்களுக்கு வடை பாயாசத்தோடு சிறப்பு மதிய உணவு வழங்குவதற்காக நான் 1800 ரூபாய் நன்கொடை அளித்தேன். ஒருநாள் மதிய உணவு வழங்கச்சொல்லி எழுத்தாளர் தேன்மொழி நன்கொடை அளித்தார். 

No comments:

Post a Comment