Tuesday, February 25, 2014

ரவிக்குமார் கவிதை

பேருந்துகளின் இரைச்சலிலும்

குழந்தைகள் உறங்குகின்ற

நடைபாதைகள் கொண்ட நாட!


அரணற்ற படித்துறையில்

இழைத்த மஞ்சளை

சிறுவர்கள் விழிமலர்த்த 

அக்குள்களில் பூசி 

அரட்டை அடிக்கின்றார் பெண்டிர் 


அவர்தம்

மேனித் தகிப்பால் மீன்கள் மேலெழும்பும்

வாவிகள் கொண்டது எம் ஊர்! 

ஏனொ என் தோழி

கொண்டையும் நனையா குழாய்நீரில் ஆசைவைத்தாள்


கொல்லை வாழையில் 

கொழுந்து இலை அசைகிறது

காற்றிலும் கிழியலாம்

விருந்து வந்தால் அறுபடலாம்

காலத்தில் வந்தால் கறிசோறு சாப்பிடலாம்





No comments:

Post a Comment