Monday, August 31, 2015

இந்திதான் இந்தியாவா?

ஐநா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியை அறிவிக்கச் செய்வதற்கு 129 நாடுகளின் ஆதரவு தேவையெனவும் அதைத் திரட்ட இந்தியா முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

ஐநாவின் அலுவல் மொழியாக ஒரு மொழியை அறிவித்தால் அதற்காகும் செலவை அந்த மொழி பேசும் நாடே ஏற்கவேண்டும். இந்தி ஐநாவின் அலுவல் மொழியாக்கப்பட்டால் ஆண்டுக்கு சுமார் 41 மில்லியன் டாலர் அதாவது 267 கோடி ரூபாய் அதற்கு செலவாகுமென்றும் அதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார். 

கோடிக்கணக்கான ஏழை மக்களின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் குறைத்த மத்திய அரசு இந்திக்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை செலவுசெய்ய முனைப்புக் காட்டுகிறது. 

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு வழங்கப்படவேண்டும். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் மத்தியில் ஆட்சி மொழிகளாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. அதைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்கள் இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளித்துவருகிறார்கள். 

யோகாவையும் இந்தியையும் இந்தியாவின் அடையாளங்களாகக் காட்டும் முயற்சி இந்த நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற தன்மையை மெள்ள மெள்ள மாற்றுவதற்கான நடவடிக்கையே ஆகும். 


1 comment:

  1. Thanks for sharing, nice post! Post really provice useful information!

    An Thái Sơn chia sẻ trẻ sơ sinh nằm nôi điện có tốt không hay võng điện có tốt không và giải đáp cục điện đưa võng giá bao nhiêu cũng như mua máy đưa võng ở tphcm địa chỉ ở đâu uy tín.

    ReplyDelete