Sunday, July 19, 2015

மது ஒழிப்புப் பிரச்சார இயக்கம்



இன்று (19.07.2015) சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற விசிக மாநில செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட முடிவுகள்:

1. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக அமைப்பில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு நீக்கப்பட்டு சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் என்னும் புதிய பொறுப்பு உருவாக்கப்படுகிறது. புதிய பொறுப்புக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்படும்வரை தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் நீடிப்பார்கள். 

2. தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2 வரை விசிக சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும். 

3. ஆகஸ்டு 17 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் ' தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி' என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்கின்றனர். 

No comments:

Post a Comment