Tuesday, July 21, 2015

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆண்டறிக்கை



தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆண்டுதோறும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். அந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என்பது விதி. ஆணையம் உருவாக்கப்பட்டு இதுவரை நான்கு ஆண்டறிக்கைகள் மட்டும் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசியாகத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மே 2007 முதல் மே 2010 வரையிலான காலத்துக்கானது. 2014 பிப்ரவரியில்தான் அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

ஆணையத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அறிக்கைகள் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டும் இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. 

ஆணையத்தின் அறிக்கைகளை உடனடியாகப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு இடதுசாரிக் கட்சிகளாவது வலியுறுத்துவர்களா?

No comments:

Post a Comment