Thursday, July 30, 2015

ரவிக்குமார் கவிதை



வானிலைச் செய்திகளுக்கும் 
விளையாட்டுச் செய்திகளுக்கும் இடையில் 

ஒரு இரவுக்கும்
இன்னொரு இரவுக்கும் இடையில் 

ஒருத்தனின் வாக்குறுதிக்கும்
ஒருத்தனின் வாக்குமூலத்துக்கும் இடையில் 

ஒரு கோரிக்கைக்கும் 
ஒரு நிராகரிப்புக்கும் இடையில் 

பிறந்த நாளுக்கும் 
நினைவுநாளுக்கும் இடையில் 

ஒரு நீதிமன்றத்துக்கும்
ஒரு சிறைச்சாலைக்கும் இடையில் 

அவர்களின் ஆர்ப்பரிப்புக்கும்
இவர்களின் அழுகைக்கும் இடையில் 

ஒரு மரணத்துக்கும்
ஒரு அஞ்சலிக்கும் இடையில் 

அந்தத் தலைவரது வருகைக்கும்
இந்தத் தலைவரது வருகைக்கும் இடையில்

ஒரு தோல்விக்கும்
ஒரு தேர்தலுக்கும்
இடையில் 

மௌனத்துக்கும் மௌனத்துக்கும் 
கண்ணீருக்கும் கண்ணீருக்கும் 
ரத்தத்துக்கும் ரத்தத்துக்கும் 
இடையில் இடையில் இடையில் 

இரவு முடிந்தது 
பொழுது விடிந்தது 
காலை ஏழுக்கு 
மீண்டும் இருண்டது 

No comments:

Post a Comment