Sunday, July 26, 2015

யாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்க!



யாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டியது ஏன்? 
- ரவிக்குமார்
----------------------

1. யாக்கூப் மேமோனின் தண்டனை தற்போது காலாவதியாகிப்போன தடா சட்டத்தின்கீழ் போலீஸாரால் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸாரிடம் அளிக்கும் வாக்குமூலத்தை வைத்து தண்டனை வழங்க வழிசெய்வது நீதிக்குப் புறம்பானது என்பதால்தான் தடா சட்டமே ரத்து செய்யப்பட்டது. 

2 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்ட தாவூத் இப்ராஹிமையோ டைகர் மேமோனையோ இந்திய அரசு இதுவரைக் கைதுசெய்யவில்லை. 

3. யாக்கூப் மேமோன் மனநிலைப் பிறழ்வு ( Schizophrenia ) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். அத்தகைய நோயாளிகளை தூக்கிலிடக்கூடாது என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. 

4. இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுபவர்களில் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. 

5.  அண்மையில் இந்தியாவின் சட்ட ஆணையத்தின் உதவியோடு டெல்லி சட்டப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தூக்கு தண்டனைக் கைதிகளில் நான்கில் மூன்று பங்கினர் ஏழைகள் என்பது தெரியவந்துள்ளது. 

6.  உலகம் முழுவதும் 140 நாடுகள் மரணதண்டனையை முற்றாகக் கைவிட்டுள்ளன. 

7. உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனையைக் கைவிடவேண்டும் என 
ஐ. நா சபை வலியுறுத்திவருகிறது. 

8. சுமார் இருபது ஆண்டுகளாக சிறையிலிருக்கும் யாக்கூப் மேமோனைத் தூக்கிலிடுவது இயற்கை நீதிக்கு முரணானதாகும். 

9. இந்த மரண தண்டனையைக் கைவிடவேண்டுமென ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும்; மார்க்கண்டேய கட்ஜு, எச்.சுரேஷ்,கே.சந்துரு உள்ளிட்ட நீதிபதிகளும்; பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தியுள்ளனர். 

யாக்கூப் மேமோனின் தூக்குதண்டனையை ரத்துசெய்யும்படிக் கோருவது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் கடமை. அந்தக் கடமையைச் செய்ய தமிழ்நாட்டு அறிவுலகம் முன்வரவேண்டும் என ஒரு எழுத்தாளனாகவும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் ( PUCL) முன்னாள் தலைவர் என்ற முறையிலும் கேட்டுக்கொள்கிறேன். 



No comments:

Post a Comment