Saturday, October 1, 2011

மணற்கேணி 8 ஆவது இதழ் வெளிவந்துவிட்டது.

மணற்கேணி 8 ஆவது இதழ் வெளிவந்துவிட்டது.

இந்த இதழின் சிறப்புப் பகுதி சங்க காலத்தை வரலாறு இலக்கியம் தொல்லியல் ஆகிய தளங்களில் ஆராய்கிறது .

புகழ்பெற்ற வரலாற்றறிஞர் பர்ட்டன் ஸ்டெய்ன் அவர்கள் தமிழக வரலாறு குறித்து எழுதிய கட்டுரை ; புதிய நோக்கில் சங்க இலக்கியப் பிரதிகளை ஆய்வுசெய்யும் ராஜ் கௌதமனின்  கட்டுரை; தமிழகத்தில் நடந்த அகழ்வாய்வுகளின் பின்னணியில் ' தமிழ் பிராமி ' வரலாற்றை ஆராயும் முனைவர் ராசவேலுவின் ஆய்வுக் கட்டுரை; பொருந்தல் அகழ்வாய்வு குறித்த பேராசிரியர் கா .ராஜனின் நேர்காணல் ; அங்கு கிடைத்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு பற்றி நடன காசிநாதன் அவர்களின் கட்டுரை; 'வயிர' என்பது பிராகிருதச் சொல்லின் மொழிபெயர்ப்பா என்று ஆராயும் பேராசிரியர் கார்த்திகேயன் அவர்களின் புதிய நோக்கிலான ஆய்வு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

ஈழத்துப் படைப்பாளிகள் சித்தாந்தன் , தவ.சஜிதரன் ஆகியோரது கவிதைகள்; பழந்தமிழ் இலக்கியம் , இலக்கணம் குறித்து பண்டிதர் நாகலிங்கம் அவர்களின் நீண்ட நேர்காணல் ; சிவா சின்னப்பொடியின் தனவரலாற்றுத் தொடர் ஆகியவற்றோடு பரமக்குடியைப் பற்றிய ரவிக்குமாரின் மூன்று கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. 

நினைவு தப்பிப் போன அப்பாவுக்கும் மகளுக்குமான உறவைக் கண்ணீர் வரவழைக்கும் விதத்தில் நுட்பமாக விவரிக்கும் தேன்மொழியின் சிறுகதை இந்த இதழின் சிறப்பு அம்சங்களில் ஓன்று. 

புதுச்சேரியில் இருக்கும் கல்லறைகளில் இடம்பெற்றிருக்கும் கல்வெட்டுகளைப் பற்றி முனைவர் விஜய  வேணுகோபால் அவர்களும்; தாராசுரம் கோயிலில் இருக்கும் புத்தர் சிலை குறித்து ரவிக்குமாரும் எழுதியிருக்கும் கட்டுரைகள் புதிய கோணத்தில் சிந்திக்க வைப்பவை. 

நம் காலத்தில் எதிர்ப்பு என்பது சாத்தியம்தானா என்ற கேள்வி நம்  எல்லோரது மனதிலும் எழுந்துள்ள இன்றைய சூழலில் அதற்குப் பதில் சொல்லும் விதமாக மிஷேல் பூக்கோ எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது. 

தனி இதழ் : 40 ரூபாய் 
ஆண்டு சந்தா :  240 ரூபாய் 
இதழ்  வேண்டுவோர் manarkeni@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

--
"Knowing is enough to mislead us"-  Maurice Blanchot
visit my website:
www.writerravikumar.com
http://nirappirikai.blogspot.com

1 comment: