Wednesday, April 1, 2015

அருந்ததி ராய்க்கு அம்பேத்கர் விருது தொல். திருமாவளவன் அறிவிப்பு



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், காமராசர், காயிதேமில்லத் உள்ளிட்ட தலைவர்களின் பெயரால் ஆறு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த விருதுகள் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று வழங்கப்பட்டுவருகின்றன. 

2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆதிவாசி மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவரும் அம்பேத்கரின் கருத்தியலை ஏற்று பரப்பி வருபவருமான அருந்ததி ராய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை இன்று (01.04.2015) மதுரையில் செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் அறிவித்தார். மே மாதத்தில் சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் அருந்ததி ராய் அவர்கள் கலந்துகொண்டு இவ்விருதினைப் பெறுகிறார். 

இதற்குமுன் அம்பேத்கர் விருது பெற்றவர்களில் முன்னாள் முதல்வர் கலைஞர், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என். வரதராஜன், மருத்துவர் ராமதாஸ், கவிஞர் இன்குலாப், பேராசிரியர் கல்யாணி, பி.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

இந்த விருது பட்டயமும், ரூபாய் ஐம்பதாயிரம் பொற்கிழியும் கொண்டது. 

No comments:

Post a Comment