Friday, April 3, 2015

விடுதலைச்சிறுத்தைகளின் விருதுகள் பெறுவோர் பட்டியல்

2015ஆம் ஆண்டுக்கான 
விடுதலைச்சிறுத்தைகளின் விருதுகள் பெறுவோர் பட்டியல்தொல்.திருமாவளவன் அறிவிப்பு

===========



 ஏப்ரல் 14 - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், 2007ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பல்வேறு துறைகளில் தொண்டாற்றிவரும் சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாக, அரசியல், சமூகம், பண்பாடு, மொழி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், பெண்ணுரிமை, கல்வி மேம்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினரின் சனநாயக உரிமைகள் போன்றவற்றிற்காகப் பணியாற்றுவோருக்கு ‘அம்பேத்கர்சுடர்’, ‘அயோத்திதாசர்ஆதவன்’, ‘பெரியார்ஒளி’, ‘காமராசர்கதிர்’, ‘காயிதேமில்லத்பிறை’ மற்றும் ‘செம்மொழிஞாயிறு’ ஆகிய விருதுகள், பாராட்டுப் பட்டயம் மற்றும் ரூ. 50,000 பொற்கிழியுடன் அளிக்கப் படுகின்றன.  
அந்த வகையில், 2015ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுவோர் பட்டியல் பின்வருமாறு:

அம்பேத்கர்சுடர் - எழுத்தாளர் அருந்ததி ராய்
அயோத்திதாசர்ஆதவன் - பேராசிரியர் க.நெடுஞ்செழியன்
பெரியார்ஒளி - திரு. கோவை கு.இராமகிருட்டிணன்
காமராசர்கதிர் - திரு. ஜி.கே.மூப்பனார் (மறைவுக்குப் பின்னர் வழங்கும் முறையில்)
காயிதேமில்லத்பிறை - பேராசிரியர் ஜவாஹிருல்லா
செம்மொழிஞாயிறு - முனைவர் அவ்வை நடராசன்

விருதுகள் வழங்கும் விழா வரும் மே 2ஆம் நாள் சென்னையில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment