Sunday, April 19, 2015

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு வாழ்த்துகள்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்த யெச்சூரி மாணவப் பருவம் முதலே அரசியலில் ஈடுபட்டுவந்தவர். இந்திய மாணவர் சங்கத்தில் பல பொறுப்புகளை வகித்தவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அவசர நிலைக் காலத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தார். அதனால் அவர் தனது பிஎச்டி ஆய்வை முடிக்கமுடியாமல் போனது. 

போட்டியின்றி யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தேர்தல் அரசியல் களத்தில் இந்திய இடதுசாரி இயக்கம் கடுமையான பின்னடைவை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் யெச்சூரி இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி இந்தப் பின்னடைவிலிருந்து இடதுசாரி இயக்கத்தை மீட்டெடுக்கவேண்டும். மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டுவதிலும் தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போல முக்கிய பங்காற்றவேண்டும். வெறும் அரசியல் தலைமையாக மட்டுமின்றி கட்சியை தத்துவ தலைமையாக வளர்த்தெடுக்கவேண்டும். அவருக்கு என் வாழ்த்துகள். 

No comments:

Post a Comment