Friday, April 10, 2015

டேவிட் ஷூல்மனின் உழைப்புக்கு என் வணக்கம்



டேவிட் ஷூல்மனும் வேறு இரு ஆய்வாளர்களுமாக இணைந்து தொகுத்திருக்கும் இந்த நூலை இன்று ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் நூலகர் நரேந்திரன் எடுத்துத் தந்தார். படித்துக்கொண்டிருந்த வித்யா தெஹேஜியாவின் நூலை மேசையில் வைத்துவிட்டு இதைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். 

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அவர் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கை தலை சுற்ற வைக்கும். இதற்கிடையில் பாலஸ்தீன இஸ்ரேல் அமைதி முயற்சிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார். 

ஷூல்மனின் உழைப்பை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. இப்போதுதான் மூர்த்தி கிளாசிக் லைப்ரரி மூலம் ஒரு புத்தகம் வந்தது. தெலுங்கு செவ்வியல் பிரதி ஒன்றின் ஆங்கில மொழியாக்கம். அதன் முன்னுரையைப் படித்த மலைப்பிலிருந்து விடுபடுவதற்கு முன் இந்தப் புத்தகம். 

. " எந்தவொரு இலக்கிய மரபையும் வரலாற்றின் விளைபொருளாய் பார்ப்பதற்கான முயற்சி அதிலிருக்கும் புதுமையான விஷயங்களை தனியே புரிந்துகொள்வதோடு மட்டும் நின்றுவிட்டால் குறைபாடுடையதாகவே இருக்கும். மரபுமீறிய படைப்பாக்கத் தருணங்கள் அப்போது கண்டுகொள்ளாமல் விடப்படலாம். புத்துருவாக்கம் என்பது கதையை மாற்றவேண்டும். இது நிகழவேண்டும்ரஎன்றால் அதற்குப் புதிய வாசக தளம் உருவாகவேண்டும்" என ஷூல்மன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அந்தக் கருத்து தமிழ்ச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. 

சமஸ்கிருத காவிய மரபைப் பற்றிய இந்த நூலில் ஹெர்மன் டீக்கனின் கட்டுரைகள் கணிசமாக இடம்பெற்றுள்ளன. எனக்கென ஒரு பிரதியை இன்று ஆர்டர் செய்தேன். டேவிட் ஷூல்மனின் அயராத உழைப்புக்கு என் வணக்கம்! 

No comments:

Post a Comment