Monday, December 1, 2014

அறிஞர் அண்ணாவின் அறிவிப்பை நிறைவேற்றுங்கள் !

ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்களுக்கு வேண்டுகோள் ! 
===========


இன்று (02.11.2014) பிறந்தநாள் காணும் அய்யா கி.வீரமணி அவர்கள் நூறாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டை தமது அரசியல் வேட்டைக்காடாக மாற்றும் தீய நோக்கத்தோடு சில கட்சிகள் வல்லூறுகளாக வட்டமிடும் நேரத்தில் அய்யா ஆசிரியர் அவர்களின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. 

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாளமுத்து உயிர்நீத்த நேரத்தில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தந்தை பெரியாருக்கு ஒருபுறம் நடராசனும் இன்னொருபுறம் தாளமுத்துவும் இருப்பதுபோல் சிலை நிறுவப்படும் என அறிவிப்புச் செய்தார். அந்த அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. அய்யா ஆசிரியர் அவர்களே முன்முயற்சி எடுத்து அந்தச் சிலையை சென்னையில் பொருத்தமானதொரு இடத்தில் நிறுவிடவேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். 

இவண்
ரவிக்குமார்

No comments:

Post a Comment