Friday, December 19, 2014

அம்பை இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கவேண்டும்?



சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் பூமணியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். 'பிறகு' நாவல் எழுதியதற்கே அவருக்கு விருது தந்திருக்கவேண்டும். தாமதித்துத் தரப்படும் அங்கீகாரம் என்றாலும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு எழுத்தாளரை அங்கீகரிக்க சாகித்ய அகாடமியின் தமிழகப் பிரிவுக்கு இத்தனை காலம் ஆகியிருக்கிறது. 

பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களின் ஒருங்கிணைப்பில் இயங்கும் சாகித்ய அகாடமியின் புதிய குழு இத்தனை காலமும் இருந்ததுபோல் அல்லாமல் விருது வழங்குவதில் ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தியிருக்கிறது. பாராட்டுவோம். 

பாலினரீதியான சமத்துவத்தையும் அந்தக் குழு கவனத்தில் கொள்ளவேண்டும். அம்பைக்கு 70 வயதாகிவிட்டது. சாகித்ய அகாடமியின் கருணைப் பார்வை தன்மேல் படுவதற்கு இன்னும் அவர் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்? 

No comments:

Post a Comment