Tuesday, December 1, 2015

ஏரியில் கட்டிய வீடு மட்டுமா மூழ்கிக் கிடக்கிறது? - ரவிக்குமார்



"ஏரியில் குளங்களில் வீடு கட்டிவிட்டு வெள்ளம் வந்துவிட்டது என்பது சரியா?" என டிவி விவாதங்களில் சில அன்பர்கள் கேட்கிறார்கள். ஏரி, குளம் என்பவை இயற்கையாக உருவானவையா? அவற்றையும் செயற்கையாக மனிதர்கள்தானே உருவாக்கினார்கள்? ஏரி குளத்தைத் தூர்த்து கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கவுமில்லை, மற்ற இடங்களில் கட்டிய வீடுகளை வெள்ளம் சூழாமலும் இல்லை. 

நகரங்களில் உட்கார்ந்துகொண்டு நகரமயம் மோசம் என்பதும், கிராமங்களில் மழையை கொடையாகப் பார்க்கிறார்கள் என்பதும் கிர்ரமங்களை தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நகரவாசிகள் சிலரின் பாசாங்கு. 

நகரமயம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தவிர்க்கக்கூடாததும் ஆகும். நகரங்களில் இருப்பவர்கள் பிளாட்பாரங்களிலா வாழ முடியும்? அவர்களுக்கு வீடு வேண்டாமா? எல்லோரும் குன்றுகளின்மீதா வீடு கட்டமுடியும்? 

கடல்மீதே கட்டிடம் கட்டி வாழ்கிற காலம் இது. இயற்கை நேசம் என்ற பெயரில் அபத்தமாகப் பேசுவதை நிறுத்துவோம். திட்டமிட்ட நகரமயத்தை வலியுறுத்துவோம். 

1 comment: