Friday, December 18, 2015

பிம்பங்களின் அரசியல்- ரவிக்குமார்



வெள்ளம் பாதித்த விருகம்பாக்கம் முதலான சில இடங்களில் தந்தி டிவி ' மக்கள் யார் பக்கம்?' நிகழ்ச்சிக்காக தேர்தலைப் பற்றிக் கேள்வி கேட்டபோது பதில் சொன்னவர்களிடம் தலைகாட்டிய கோபத்தைப் பார்த்தவர்கள் இளையராஜாவின் எதிர்வினையை வேறுவிதமாகப் புரிந்துகொள்ளக்கூடும். 

வெள்ளத்தோடு அதைப்பற்றிய நியூஸ் வேல்யூவும் வடிந்துவிட்டதாகக் கருதிய காட்சி ஊடக காமிராக்கள் தங்களுக்கு எப்போதும் செய்திச் சுரங்கமாக இருக்கும் சினிமா குப்பையை சீய்க்க ஆரம்பித்துவிட்டன. அதன் அடையாளம்தான் சிம்பு- அனிருத் பாடல் பிரச்சனை 

இளையராஜா பதில் சொல்லியிருந்தால் அதில் நியூஸ் வேல்யூ இந்த அளவுக்கு இருந்திருக்காது. அனிருத்தைவிட இளையராஜா மோசம் என்று 'நிரூபித்து'விட்டார்கள் 

கணங்களில் துடித்துக்கொண்டிருக்கும் காட்சி ஊடகப் போட்டியில் பலியிடப்படுகிறது ஊடகவியலாளர்களின் தன்மானம். அவர்களின் அறச் சீற்றம் ஊடக மூலதன அரசியலுக்கு எதிராகவும் திரும்பவேண்டும்.

No comments:

Post a Comment