Monday, December 7, 2015

தமிழக வெள்ளம்: இளைஞர்களின் தொண்டு = அரசியல்வாதிகள்மீதான வெறுப்பு



சென்னை, கடலூர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளைஞர்கள் செய்யும் நிவாரணப் பணிகள் அரசாங்கத்தின் தேவையையே மறக்கடித்துவிட்டது. இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பில் தார்மீக ஆவேசம் வெளிப்படுவதைக் காண்கிறேன். அது கருணையால் உந்தப்பட்டதல்ல, மாறாக அரசியல்வாதிகள்மீதான கோபத்தால் எழுந்த உணர்வு. 

இளைஞர்கள் மட்டுமல்ல அரசியல் கட்சிகளைச் சாராத பொதுமக்கள் எல்லோரிடமும் இந்தக் கோபம் வெளிப்படுகிறது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு சிலநாட்களுக்குமுன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பதைப்போல இந்த அரசியல்/ சமூக அமைப்பை மாற்றியமைக்கிற ஒரு புரட்சிதான் இதற்குத் தீர்வு. 

அரசியல்வாதிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் சுயபரிசீலனை செய்துகொண்டு ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பாற்ற முன்வரவேண்டும். 

தனிநபர் துதிக்கும், பிம்ப வழிபாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 

இலவசங்களாலும், பணத்தாலும் மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இனி அரசியலில் இடம் இருக்காது. 

No comments:

Post a Comment