Wednesday, December 30, 2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொல்கத்தா ப்ளீனம்: வரவேற்கத்தக்க முடிவுகள்!


இந்தியாவெங்குமிருக்கும் கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஊதியத்தை நாட்டில் நிலவிவரும் குறைந்தபட்ச ஊதியத்துக்கு ஏற்ப உயர்த்தி வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க செய்தி. 

அக்கட்சியின் உறுப்பினர்களில் சுமார் இருபது விழுக்காடு வரை எஸ்.சி சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் எனவும் கட்சியின் அதிகாரப் பொறுப்புகளில் அவர்களுக்கு உரிய பங்கினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதையொட்டி கட்சியின்  மாநிலக் குழுக்கள், மத்தியக் குழு ஆகியவற்றில் சமூகரீதியான பிரதிநிதித்துவம் எப்படி உள்ளது என ப்ளீனத்தில் ஆய்வுசெய்யப்பட்டதாகவும் தோழர் பிரகாஷ் காரத் கூறியதாக இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. இதுவும் வரவேற்கத்தக்கதே! கட்சி துவக்கப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்த பின்னரும் அக் கட்சியின் பொலிட்பீரோவில் எஸ்.சி பிரிவினர் ஒருவரும் இடம்பெறவில்லை என அக்கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றபோதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இடதுசாரிக் கட்சிகளில் தலித்துகளுக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டால் அதை சிறப்பாக நிறைவேற்றும் திறமையும் அர்ப்பணிப்பும் அவர்களுக்கு உண்டு என்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் தோழர் டி.ராஜா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

இடதுசாரிக் கட்சிகள் தமிழ்நாட்டில் தீண்டாமையை ஒழிக்க தனி அமைப்புகளை உருவாக்கியிருப்பதைப்போல எல்லா மாநிலங்களிலும் உருவாக்கவேண்டும். அவர்கள் ஆட்சியிலிருந்த மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அத்தகைய அமைப்புகள் உள்ளனவா? 

No comments:

Post a Comment