Wednesday, December 16, 2015

மகளிரையும் அர்ச்சகராக்குக!

மகளிரையும் அர்ச்சகராக்கும் வகையில் சட்டத்  திருத்தம் செய்யவேண்டும் என நான் 2006 ஆம் ஆண்டே சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன். 

25-7-2006 அன்று தமிழக சட்டப்பேரவையில் திருத்திய வரவு-செலவுத் திட்டம், 2006-2007ன் மீதான பொது விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதில் ஒரு பகுதி (முற்பகல் 11-10 )

திரு. து. ரவிக்குமார்: ”அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு சட்டம், இப்பொழுது இயற்றப்பட்டிருக்கின்றது. (மேசையைத் தட்டும் ஒலி) அந்தச் சட்டத்தின் அடிப்படையிலே சாதிப் பாகுபாடு களையப்படுகிறது.  ஆனால், பாலினப் பாகுபாடு களையப்படவில்லை.  அந்தச் சட்டத்திலே பெண்களும் அர்ச்சகராகலாம் என்கின்ற விதியினைச் சேர்த்து, (மேசையைத் தட்டும் ஒலி) மகளிருக்கு, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் அந்தக் கருவறைகளை நீங்கள் திறந்துவிட வேண்டுமென்று அன்போடு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.”

No comments:

Post a Comment