Sunday, December 13, 2015

பெனடிக்ட் ஆண்டர்ஸன் (1936-2015)காலமானார் - ரவிக்குமார்



தேசியம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாட்டை முன்வைத்த சிந்தனையாளர் பெனடிக்ட் ஆண்டர்சன் (1936-2015) இன்று (13.12.2015) காலமானார். அவரது ஆய்வுகளின் மையமாக விளங்கிய இந்தோனேஷியாவில் தங்கியிருக்கும்போது உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது. 

" கடந்த இருபது ஆண்டுகளாக மார்க்சியத்தின்மீதான ஈர்ப்பு குறைந்திருக்கிறது என்றபோதிலும் பிரச்சனைகள் முடியாத காரணத்தால் மார்க்சியத்தின் தேவையும் முடிந்துவிடாது" என்று நம்பிக்கை தெரிவித்த மார்க்சியர் அவர். 

" யுத்தத்தின்மூலம் புதிய நாடுகளை வெல்வது சாத்தியமில்லை என்பது நிதர்சனமாகிவிட்டது. இப்போது தேசங்களை அச்சுறுத்துவது அன்னிய நாடுகளல்ல, உள்நாட்டுச் சிதைவுதான்."எனக் குறிப்பிட்ட அவர் " ரஷ்யாவிலும், செக்கோஸ்லேவேக்கியாவிலும் அதுதான் நடந்தது. அது இந்தியாவிலும் நிகழக்கூடும். நாடுகள் இனி பெரிதாக முடியாது, சிறியவையாக மாறுவதே சாத்தியம்" என்று 2009 ஆம் ஆண்டில் நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார். 

தேசியத்தின் உருவாக்கத்துக்கும் அச்சுத் தொழில்நுட்பத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பை அவர் எடுத்துக்காட்டினார். தேசியம் குறித்த அவரது பார்வை ஆசிய நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அவரது உலகப்புகழ்பெற்ற நூலான Imagined Communities தமிழில் எப்போதோ மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ்ச் சிந்தனையுலகம் அந்த அளவுக்கு நுண்ணுணர்வு கொண்டதாக இல்லை. 

தேசியம் என்ற கருத்தாக்கம் குறுந்தேசிய வெறியாக மாற்றப்பட்டு சீரழிக்கப்படும் இன்றைய சூழலில் அந்த நூலை முன்வைத்து தீவிரமான விவாதங்களை முன்னெடுக்க இனியாவது இடதுசாரிகள் முன்வரவேண்டும். 

No comments:

Post a Comment