Sunday, December 20, 2015

நூலகங்களைக் காப்போம்!



வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நூலகங்களில் ஆயிரக் கணக்கான நூல்கள் சேதமடந்துள்ளன. சென்னையில் மட்டும் ஏழு நூலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் தனி நபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ ஏதேனும் ஒரு நூலகத்தைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். அதற்குக் குறைந்தபட்சம் ஆயிரம் நூல்களை வழங்கலாம். 

எனது வேண்டுகோளை ஏற்று சென்னை அரங்கநாதன் சப்வே வுக்கு அருகிலுள்ள புதுத் தெரு நூலகத்தை சுமார் ஆறு லட்ச ரூபாய் செலவில் புனரமைத்துத்தர அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) பொதுச்செயலாளர் திரு சி.ஹெச்.வெங்கடாசலம் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் சேதமுற்ற நூலகங்களுக்கு புத்தக அடுக்குகள் சிலவற்றை வாங்கித்தர பெங்களூரைச் சேர்ந்த திரு நவீன் மெத்தில் என்பவர் முன்வந்திருக்கிறார். 

கேரள மாநிலத்தில் 'கிராமத்துக்கு ஒரு நூலகம்' என்ற திட்டத்தைப் பிரச்சாரம் செய்துவரும் திரு சுஜய் அவர்கள் சென்னையில் சேதமுற்ற நூலகங்களுக்கு நூல்களை சேகரித்துத்தர முன்வந்திருக்கிறார். 

நமது முயற்சியை ஒன் இந்தியா இணைய இதழ் மூலம் அறிந்த போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை வெளியிட்டுவரும் பதிப்பாளர் திரு சக்திவேல் திங்களன்று முதல் தவணையாக 50 நூல்களைத் தருவதற்கு முன்வந்துள்ளார். 

நாளை (திங்கள் 21.12.2015 ) காலை சுமார் 11.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் இருக்கும் மாவட்ட நூலக அலுவலரை சந்தித்து முதல் தவணை நூல்களை வழங்கவுள்ளோம். என்னுடன் பத்திரிகையாளர் திரு ஸ்ருதி சாகர் யமுனன், எழுத்தாளர் மருதன், பதிப்பாளர் 'ஆழி' செந்தில்நாதன் ஆகியோரும் இணைந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர். 

இந்தத் திட்டத்தில் பங்களிக்க விரும்பும் நண்பர்கள் அங்கே வருமாறு அல்லது தொலைபேசி/ மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறேன். 

அன்புடன்
ரவிக்குமார்
ஆசிரியர்,மணற்கேணி 

தொடர்புக்கு 94430 33305 
மின்னஞ்சல் : manarkeni@gmail.com

No comments:

Post a Comment