Saturday, December 12, 2015

ட்விட்டர் மூலம் வந்த உதவி - ரவிக்குமார்



சிதம்பரத்தை அடுத்த வடக்குமாங்குடியிலிருக்கும் தலித் தெருவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் குடிசை இந்த மழையில் மிகவும் சேதமடைந்துவிட்டது. அவரது கணவரும் மகன்களும் இறந்துவிட்டனர். அவரது குடிசையோடு அவரைப் படமெடுத்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்து தொடர்புகொண்ட ஒரு தமிழ் இளைஞர் அந்த மூதாட்டியின் குடிசையை சரிசெய்ய தான் உதவ விரும்புவதாகத் தகவல் அனுப்பினார். 


மகாலட்சுமி என்ற அந்த மூதாட்டிக்கு வங்கிக் கணக்கு இருந்தது. அவரது பாஸ் புத்தகத்தைப் படமெடுத்து ட்விட்டரில் அனுப்பினேன். அமெரிக்க இளைஞர் அந்தக் கணக்கில் உடனடியாக மூவாயிரம் ரூபாயை அனுப்பினார். அந்தத் தொகை அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டதை படம் எடுத்து ட்விட்டர் மூலமே அனுப்பி வைத்தேன். அந்த இளைஞருக்கு மிகுந்த மன நிறைவு.


நான் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அவர் தனது பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அந்த நல்ல மனிதருக்கு என் நன்றி. 

1 comment: