Tuesday, December 1, 2015

மழைக்காலத்திலாவது மது விற்பனையை நிறுத்தக்கூடாதா?



சென்னையிலும்,  மழை வெள்ளத்தால் தொடர்ந்து அல்லல்பட்டுவரும் பிற மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் திறந்திருக்கின்றனவோ இல்லையோ டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன; அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதோ இல்லையோ தட்டுப்பாடில்லாமல் மது கிடைக்கிறது. 

குடிமகன்கள் மழைக்காலக் குளிரைப் போக்க அளவுக்கதிகமாக மது அருந்தக்கூடும். அப்படி குடிப்பவர்கள் இப்போது விழுந்து கிடக்க பிளாட்பாரங்கள் கூட இல்லை. விழுந்தால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பது நிச்சயம். 

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை ஏற்கனவே 200 ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்துகொண்டிருக்கும் மது விற்பனையால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. 

தமிழக அரசு மனமிரங்கி டிசம்பர் 5 வரையிலாவது மழை வெள்ள பாதிப்புக்காளாகிவரும் பகுதிகளில் மது விற்பனையை நிறுத்தக்கூடாதா? 

No comments:

Post a Comment