Tuesday, December 29, 2015

சாகித்ய அகாடமி: பெங்களூர் ஆய்வரங்கம்

நாடுமுழுதும் ' அவார்டு வாப்ஸி' என விருதுகளைத் திருப்பித் தரும் போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் சூழலில் தென்னிந்திய மொழிகளில் தலித் இலக்கியம் குறித்துப் பேசுவதற்காக இங்கே நாம் கூடியிருக்கிறோம். இந்த மாநிலத்தில் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் கல்புர்கி அவர்களுக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து விருதுகளையும் பதவிகளையும் துறந்த கன்னட தலித் எழுத்தாளர்கள் அரவிந்த மாளகத்திக்கும் தேவனூரு மகாதேவாவுக்கும் என் வணக்கம். 

நான் சபிக்கப்பட்ட ஒரு மாநிலத்திலிருந்து வந்து குற்றவுணர்வோடு உங்கள் முன் நிற்கிறேன். வளமான தொன்மையான இலக்கியப் பாரம்பரியம் கொண்டது தமிழ் என சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது உண்மைதான். ஆனால் சகிப்பின்மைக்கு எதிராக நாடெங்கும் எழுந்த எதிர்ப்பில் விருதுபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரும் பங்கேற்கவில்லை. இது தமிழ் இலக்கிய உலகின்மீது நீங்காக் கறையாகப் படிந்து கிடக்கிறது. 

( இன்று - 29.12.2015- சாகித்ய அகாடமி சார்பில் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கில் தலித் புனைவுகள் என்ற தலைப்பில் நான் ஆற்றிய ஆங்கில உரையின் துவக்கப் பகுதி ) 


No comments:

Post a Comment