Monday, December 28, 2015

வடியாத கருணை

வடியாத கருணை: தலித் பெண்ணுக்கு ஊடகவியலாளர் தன்யா ராஜேந்திரன் உதவி 

மழை வெள்ளத்தில் தனது குடிசையை இழந்து இரண்டு கைக்குழந்தைகளோடு பரிதவித்த வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண்ணுக்கு அந்த வீட்டைப் புதுப்பித்துக்கொள்வதற்காக ஊடகவியலாளர் தன்யா ராஜேந்திரன் பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மகாலட்சுமியின் வீடு சேதமடைந்தது பற்றி ட்விட்டர் மூலம் நான் விடுத்த செய்தியை அறிந்து மூன்று பேர் சேர்ந்து ஏற்கனவே 13000/- ரூபாய் அளித்துள்ளனர். அந்த செய்தியைப் பார்த்த தன்யா அவர்கள் அந்த கிராமத்தில் வேறு எவருக்கும் அப்படி உதவி தேவைப்படுகிறதா எனக் கேட்டார். இந்தப் பெண்ணின் விவரங்களைக் கூறினேன். அதன் அடிப்படையில் அவரது வங்கிக் கணக்குக்கு பத்தாயிரம் ரூபாயை அனுப்பியிருக்கிறார். 

வெள்ளத்தின்போது கவிதா முரளிதரன் உள்ளிட்ட அவரது நண்பர்களோடு இணைந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அவர் சென்னைக்கும் கடலூர் மாவட்டத்துக்கும் அனுப்பினார். பெங்களூரில் இருந்தபடி தமிழ்நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்யா அவர்களுக்கு நன்றி. 

No comments:

Post a Comment