Saturday, December 26, 2015

புத்தகத்தின் நிறை - ரவிக்குமார்


புத்தகத்தின் நிறை
- ரவிக்குமார்

பொருட்களின் நிறை 
எப்படி வருகிறதென 
அறிவியலார் சொல்லக்கூடும்
ஆனால் 
பொருட்களுக்கான விதி
புத்தகத்துக்குப் பொருந்தாது

புத்தகத்தின் எடையை 
காகிதங்களைக்கொண்டு 
தீர்மானிக்க முடியாது

ஒரு ஊர் சூறையாடப்பட 
ஒரு புத்தகம் காரணமானதுண்டு
ஒரு நாட்டையே 
உடைத்து நொறுக்கிய 
புத்தகங்களை அறிவோம் நாம்

இன்று ஒரு புத்தகம் கிடைத்தது
'இழந்த மாலைகள் 
இழந்த வாழ்வுகள்'
ஈழத் துயரம் கசியும் கவிதைகள்

கையில் எடுத்தபோது 
கனக்கவே இல்லை

படிக்கத் தொடங்கினேன் 
பாரம் தாங்காது 
செத்துக்கொண்டிருக்கிறேன் 

- 26.12.2015 


No comments:

Post a Comment