Friday, February 27, 2015

பாஜக அரசின் பெருவெடிப்பு சீர்திருத்தங்கள்: மானியங்களுக்கு சமாதி? -ரவிக்குமார்



அரிசி கோதுமை மண்ணெண்ணெய் தண்ணீர், உரங்கள் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை என பொருளாதார ஆய்வறிக்கை 2014--15 ல் சொல்லப்பட்டுள்ளது. மானியத்தில் வழங்கப்படும் அரிசியில் 15% வீணாகிவிடுகிறது, கோதுமையில் 54% வீணாகிறது. மீதமுள்ள அரிசி, கோதுமையில் பாதி மட்டுமே ஏழைகளுக்குச் சென்று சேர்கிறது என அந்த அறிக்கை கூறுகிறது. எனவே மானியம் அளித்து விலையைக் குறைத்து பொருளை விற்பதற்குப் பதிலாக மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கிவிட்டு பொருட்களை சந்தை விலையில் விற்கலாம் எனப் பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. நேரடியாகப் பணத்தை அளிப்பதற்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தவேண்டும், வங்கிகளோடு தபால் அலுவலகங்களையும் இதற்கு உபயோகிக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட்டின் முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. நாளைய பட்ஜெட்டில் அத்தியாவசியப் பொருட்களின் மானியங்களை மோடி அரசு காலிசெய்யப்போகிறது. அதற்கான முன்னறிவிப்பே இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை! 

No comments:

Post a Comment