Saturday, February 7, 2015

டெல்லி தேர்தல்:

அனுபவத்திலிருந்து கற்குமா ஆம் ஆத்மி? 
- ரவிக்குமார்

========
டெல்லி தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளைப் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. டெல்லியிலுள்ள அரசியல் ஆய்வு ந்றுவனமான 'டுடேஸ் சாணக்யா' என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் வாக்குப் பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்பு மற்றவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. வாக்களித்தவர்களில் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை அது கணித்திருக்கிறது. 

எஸ்.சி பிரிவினரில் 55% ஆம் ஆத்மிக்கும் 29% பாஜகவுக்கும் 9% காங்கிரசுக்கும் வாக்களித்துள்ளதாக  'டுடேஸ் சாணக்யா' தெரிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 44%ஆம் ஆத்மிக்கும், 34% பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர் எனவும்; பிராமணர்களில் 44% ஆம் ஆத்மி 42% பாஜகவுக்கும் வாக்களித்திருப்பதாகவும் அது கூறுகிறது. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது இளம் வயது வாக்காளர்கள் பெருமளவில் பாஜகவை ஆதரித்தனர். ஆனால் டெல்லி தேர்தலில் அந்த நிலை மாறிவிட்டது. 18 முதல் 25 வரை வயதுகொண்ட வாக்காளர்களில் 44% ஆம் ஆத்மிக்கும் 34% பாஜகவுக்கும் வாகளித்ததாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 26 முதல் 35 வயது வரையிலான வாக்காளர்களிலும் பாஜகவைவிட 10% கூடுதலான ஆதரவை ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது. 66 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களில் 40% பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அது ஆம் ஆத்மியைவிட 2% அதிகம். 

எஸ்சி மக்களின் ஆதரவை எந்தக் கட்சி அதிகம் பெறுகிறதோ அந்தக் கட்சிதான் ஆட்சி அமைக்கிறது. டெல்லிக்கும் இது பொருந்தும். 

வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட டெல்லி மக்கள் இம்முறை தெளிவான தீர்ப்பை  வழங்கவிருக்கிறார்கள். ஆம் ஆத்மியும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு நல்ல காரியங்களைச் செய்யவேண்டும்.  

No comments:

Post a Comment