Monday, February 16, 2015

நிலையான வாக்கு வங்கி எனும் மாயை! - ரவிக்குமார்



கட்சிகளுக்கு நிலையான வாக்கு வங்கி என ஒன்று இருப்பதாக நாம் எல்லோருமே நம்பிக்கொண்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு உண்மை? 

எதை நிலையான வாக்கு வங்கி என்பது? 

1.கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை வைத்து சொல்லலாமென்றால் சாதி அமைப்புகள் தமது சாதி மக்கள் தொகையை அதிகரித்துக் கூறுவதுபோலத் தான் கட்சிகளும் தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூறி வருகின்றன. அதை சோதிப்பதற்கு சரியான வழிமுறை இல்லை. அங்கீகரிக்கப்ட்ட கட்சிகளின் உறுப்பினர்களின் உண்மைத் தன்மையை சரி பார்க்க தேர்தல் ஆணையம் எந்த விதியையும் உருவாக்கவில்லை. கட்சிகள் சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் அது தமிழ்நாட்டின் மக்கள் தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். எனவே அந்த எண்ணிக்கையை நாம் நிலையான வாக்கு வங்கி என ஏற்க முடியாது. 

2. கட்சிகள் வாங்கும் வாக்குகளை வைத்து முடிவுசெய்யலாமா என்றால் அதுவும் சரி வராது. ஏனெனில் எந்தக் கட்சியும் தனித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில்தான் அதிமுக தனித்து நின்றது. ஆட்சி அதிகாரம், பணபலம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டால் அது வாங்கிய வாக்குகளும் அதன் நிலையான வாக்கு வங்கி எனக் கருத முடியாது. 

3. ஒரு கட்சியின் உறுப்பினர் அதற்கு நேரெதிரான கட்சிக்கு வாக்களிக்க மாட்டார் என்பதும்கூட மூட நம்பிக்கைதான். சாதி, பணம் ஆகியவை கட்சி விசுவாசத்தைக் காலிசெய்துவிடுகின்றன. 

எனவே இந்தக் கட்சிக்கு இத்தனை சதவீத வாக்கு அந்தக் கட்சிக்கு அத்தனை சதவீத வாக்கு என்பதெல்லாம் கற்பனைக் கதைகளே அன்றி வேறல்ல. மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்பார்கள். இதன் பொருள் அவர்கள் சுதந்திரமான வாக்காளர்களாக இருக்கிறார்கள் என்பதல்ல. முதலாளித்துவ சமூகத்தில் ஒரு உழைப்பாளிக்கு இருக்கும் சுதந்திரம் போன்றதுதான் இது. அதாவது அவர் தனது உழைப்பை எவருக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளும் சுதந்திரம். அதுபோல வாக்காளர்களும் தமது வாக்குகளை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ள சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதை தேர்தல் ஜனநாயகத்தின் உச்சகட்டம் எனக் கூறலாமா? 


No comments:

Post a Comment