Friday, February 20, 2015

தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறேன் - ரவிக்குமார்



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு செயலாளராக தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்த்த செய்திதான் எனினும் இடதுசாரிகள் தமிழ்நாட்டில் புதிய அரசியல் பாதையைத் தேர்வுசெய்திருக்கும் இன்றைய சூழலில் தோழர் ஜி.ஆர் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று தகவல் அறிந்ததும்
தொலைபேசியில் தொடர்புகொண்டேன். கூட்டத்தில் இருந்தாலும் ஃபோனை எடுத்தார். வாழ்த்துகள் என்று சொன்னதோடு துண்டித்துவிட்டேன்.

சற்றுமுன் தோழர் ஜி. ஆர் அவர்களை ஃபோனில் அழைத்து எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். இடதுசாரிக் கட்சிகளில் பதவி என்பது பிழைப்பதற்கான வழி அல்ல, உழைப்பதற்கான வாய்ப்பு . 

சிபிஐ தோழர்களோடு பேசுவதுபோல சிபிஐ எம் தோழர்களிடம் சகஜமாகப் 
பேச முடிந்ததில்லை. தோழர் டிகேஆர் தவிர மற்ற தோழர்களிடம் ஒரு இறுக்கம் இருப்பதாக உணர்ந்திருக்கிறேன். ஆனால்  தோழர் கே.பாலகிருஷ்ணனும், தோழர் ஜி. ஆரும் அப்படியான இறுக்கம் இல்லாமல்
பழகக்கூடியவர்கள். தயக்கம் எதுவும் இல்லாமல் மாற்றுக் கருத்துகளை அவர்களிடம் சொல்ல முடியும். இயக்கங்களின் முன்னணிப் பொறுப்பாளர்களுக்கு இத்தகைய தனிப்பட்ட பண்புகள் அவசியம். 

தோழர் ஜி.ஆருக்கு என் வாழ்த்துகள். 


No comments:

Post a Comment