Thursday, February 12, 2015

ஈழம்:

ஐநா மனித உரிமைக் கவுன்சில் அறிக்கையை ஒத்திவைக்க இலங்கை சதி
- ரவிக்குமார் 
=============
எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கை விவாதிக்கப்படவேண்டும். அதை தள்ளிப்போடுவதற்கு இலங்கை முயற்சித்துவருகிறது. தற்போது அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அதற்கான ஆதரவைத் திரட்டிவருகிறார். 

இலங்கை அரசாங்கமே விசாரணையை நடத்துமென்றும் ஐநா அறிக்கையை அந்த விசாரணை அமைப்பிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம் எனவும் இலங்கை கூறிவருகிறது. அதை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே இலங்கை அதிபர் மைத்ரிபாலா இங்கு வருகிறார். 

இலங்கை பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என செய்திகள் கசிகின்றன. அப்போது சிங்கள வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்த முயற்சி எனக் கூறப்பட்டாலும் இனப்படுகொலை நடந்த நேரத்தில் ராணுவ அமைச்சராக இருந்த மைத்ரிபாலா ஒருபோதும் போர்க்குற்ற விசாரணையை அனுமதிக்கமாட்டார் என்பதே உண்மை. ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க விழிப்போடு இருந்து தமிழகம் போராடவேண்டிய காலம் இது. ஒன்றுபட்டு நிற்கவில்லையென்றாலும் ஒரே குரலிலாவது நாம் பேசவேண்டும் என்பதை தமிழக அரசியல் கட்சிகள் உணர்வார்களா? 

No comments:

Post a Comment