Tuesday, February 24, 2015

தோழர் சி.மகேந்திரனை வாழ்த்துகிறேன்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக தோழர் சி. மகேந்திரன் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அவருக்கு எனது வாழ்த்துகள். 

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்துக்கொண்டிருந்தபோது 1981 ல் அவரோடு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது அவர் அகில இந்திய மாணவர் பெருமன்றத்துக்குப் பொறுப்பாக இருந்தார். திராவிடர் கழக மாணவர் அமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருந்த நான் மார்க்சியம் நோக்கி ஈர்க்கப்பட்ட காலம் அது. அன்றைய எனது தேடலுக்கு AISF போதுமானதாக இல்லை. எனினும் தோழர் மகேந்திரனுடனான நட்புறவு தொடர்ந்தது. 

தோழர் சி. மகேந்திரன் தோழர் ஆர்.என்.கேவைப்போல எல்லோரிடமும் அன்போடு பழகக் கூடியவர். படிப்பதில் எழுதுவதில் ஈடுபாடு கொண்டவர். மதவாத எதிர்ப்பு சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அவர் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டால் அது அக் கட்சிக்கு பயனுள்ளதாகவே இருக்கும். 

No comments:

Post a Comment