Thursday, February 5, 2015

தேவை தனியார் துறையில் இட ஒதுக்கீடு

வளர்ச்சிக்கு உதவும் இட ஒதுக்கீடு: ஆய்வு வெளிப்படுத்தியிருக்கும் உண்மை
===============
எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டால் வளர்ச்சி அதிகரித்துள்ளது என இந்திய ரயில்வே துறையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதுகுறித்த செய்தியை இன்றைய இந்து ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வை மேற்கொண்ட அஷ்வினி தேஷ்பாண்டே தாமஸ் வெய்ஸ்காஃப் ஆகியோருக்கு நன்றி. இந்தச் செய்தியை எழுதிய ருக்மினிக்கும் முதல் பக்கத்தில் வெளியிட்ட இந்து ஆசிரியர் மாலினி பார்த்தசாரதிக்கும் நன்றி.

தனியார் துறைகளில் தலித்துகள் சாதியின் காரணமாக உரிய வாய்ப்பளிக்கப்படாமல் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.கே.தோரட் வெளியிட்ட ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியது. மிக விரிவான ஆதாரங்களோடு செய்யப்பட்ட அந்த ஆய்வு நூலாகவும் வெளிவந்திருக்கிறது. 

இந்த ஆய்வுகள் இட ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகின்றன என்பதோடு இதைப்பற்றி தலித் இயக்கங்கள் கவனம் செலுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. 

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைத் திரட்டுவதில் தலித் இயக்கங்களும் சமூகநீதி இயக்கங்களும் இப்போதாவது அக்கறை காட்டவேண்டும். 

No comments:

Post a Comment