Tuesday, February 24, 2015

பெருமாள் முருகன் வழக்கில் இணைந்தார் -ரவிக்குமார்


பெருமாள் முருகன் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பெருமாள் முருகன் சார்பில் வழக்கறிஞர் சதிஷ் பராசரன் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட முதல் அமர்வு தமுஎச தொடுத்த வழக்கில் பெருமாள் முருகனை இன்னொரு மனுதாரராக இணைத்துக் கொண்டிருக்கிறது. 

இதே பிரச்சனையில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்த லஜபதிராயின் மனுவும் பியுசிஎல் அமைப்பின் மனுவும்  இறுதிவாதத்தின்போது வேண்டுமானால் தமது கருத்துகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்ற அனுமதியோடு முடித்துவைக்கப்பட்டன. 

லஜபதிராய் சார்பில் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி ஆஜரானார். பெருமாள் முருகனுக்காக ஆஜராகியிருக்கும் சதிஷ் பராசரன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆஜராகும் 'காஸ்ட்லியான' வழக்கறிஞர் எனச் சொல்கிறார்கள். (high profile வழக்கு high profile advocate!) 

பெருமாள் முருகன் affidavit போட்டு வழக்கில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்த் தரப்பு சார்பாகவும் ஒருவர் affidavit போட்டிருப்பதாக அறிந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுமட்டும் நிச்சயம். மதச்சார்பின்மைமீது அக்கறைகொண்ட அனைவரும் தொடர்ந்து விழிப்போடு இந்த வழக்கை கவனிக்கவேண்டியது அவசியம். 

No comments:

Post a Comment