Tuesday, February 17, 2015

பெருமாள் முருகன்: இந்துத்துவ எதிர்ப்பில் பலவீனமான குறியீடு ? - ரவிக்குமார்



பெருமாள் முருகன் சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டார் என்பதில் மகிழ்ச்சி. இன்று The Hindu ல் வெளியாகியிருக்கும் அதுகுறித்த செய்திக்கட்டுரையைப் படித்தபோது 'கொஞ்சம் ஓவர்' என்ற எண்ணம் எழுந்தது. 

பெருமாள் முருகன் பிரச்சனைக்காக இந்து நாளேடு கொடுத்துவரும் முக்கியத்துவம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அது Hero Worship என்ற நிலைக்குப் போவது பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாததன் அல்லது புரிந்துகொள்ள மறுப்பதன் விளைவு எனக் கருதுகிறேன். 

இந்துத்துவத்தை எதிர்ப்பதற்கான The Hindu இன் உறுதியைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்துத்துவ எதிர்ப்புக் குறியீடாக பெருமாள் முருகனின் எழுத்துகளை முன்னிறுத்துவதில் சிக்கல் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆற்றல்கொண்ட பலமான குறியீடாக அவரது எழுத்துகளைக் கருத முடியுமா?

No comments:

Post a Comment