Thursday, February 12, 2015

பெருமாள் முருகன் :

மண்ணின் மைந்தர் என்பதன் பொருள் என்ன? 
- ரவிக்குமார்
===========

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கையொட்டி பெருமாள் முருகன் தம்பதியினரை சென்னைக்கு இடமாற்றல் செய்து இன்று ஆணை வழங்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. ஒருவிதத்தில் ஆறுதல் என்றாலும் கொங்கு மண்ணிலிருந்து வெளியேறுவது அவருக்கு உவப்பாக இருக்காது. ' மண்ணின் மைந்தர்' களின் பிரச்சனை அது. 

மண்ணின் மைந்தர் என்பதே அடிப்படையில் பிற்போக்கான கருத்து என்பது என் நிலைபாடு. அந்த அடையாளத்தை யார் கோர முடியும்? ஒரு தலித்தோ ஒரு பிராமணரோ மண்ணின் மைந்தர் என சொல்லிக்கொள்ள முடியுமா? கிராமப்புறங்களை விமர்சனமின்றி சிலாகிப்பவர்களைக் கண்டாலே எனக்கு டென்ஷன் கூடிவிடுகிறது.  கிராம பஞ்சாயத்துகளை மேலும் அதிகாரப்படுத்தவேண்டும் என இடதுசாரிகள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இந்திய கிராமங்களைப்பற்றி கார்ல் மார்க்ஸ் சொன்னதை இடதுசாரிகள் மறுக்கிறார்களா? கள்ளச் சாராயத் தொழிலைப் போல கிராமப்புற சாதி அமைப்பை நீரூற்றி தளிர்க்கவைத்துவிட்டது இந்த பஞ்சாயத்து முறை. இதைப் பற்றிய ஆய்வு அவசியம். 

தோழர் எஸ்.என்.நாகராஜன் கொங்கு மண்ணில்தான் வாழ்கிறார். பெருமாள் முருகன் பிரச்சனையில் அவர் ஏதாவது கருத்து கூறினாரா? என அறிய ஆவலாக இருக்கிறது.

No comments:

Post a Comment