Thursday, February 5, 2015

சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யக்கூடாது!


தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.
சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு அரசு கூறும் காரணங்கள் ஏற்கக் கூடியவையாக இல்லை.  தற்போது உயர்நீதிமன்ற வளாகத்திலேயே கல்லூரி இருப்பதால் மாணவர்கள் நீதிமன்ற நடைமுறைகளை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. புதிய கட்டிடம் தேவையென்றால் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே கட்டுவதற்கு இடம் இருக்கிறது. எனவே சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய மாட்டோம் எனத் தமிழக அரசு அறிவித்து மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment