Saturday, November 13, 2010

ஆங் சாங் சூச்சிக்காக ஒரு கவிதை




ஆங் சாங் சூச்சி 
- மௌரீன் மெக்நீல்
தமிழில் : ரவிக்குமார் 

எல்லாவற்றுக்கும் மேல் 
நீ செயல்படுகிறாய்
பர்மா மீதுள்ள நேசத்தால் 
வன்முறை மீதான எதிர்ப்புணர்வால் 
உனது செயல்கள் 
உண்மையை எப்படி உருவாக்குவது என்பதையும் 
சுதந்திரம் என்றால் என்ன என்பதையும் 
எனக்கு உணர்த்தின

எல்லாவற்றுக்கும் மேல் 
உனது கடப்பாடு 
எனக்கு போதிக்கிறது 
ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையை 
எனது ஆசையின் 
குறியீடாக எப்படி மாறுவதென்பதை  
எளிமையாக எப்படி வாழ்வது என்பதை 

எல்லாவற்றுக்கும் மேல் 
உனது வீட்டுக்குள் 
அச்சம் நுழைந்துவிடாமல் 
நீ தடுத்து நிறுத்தியிருப்பதை நான் போற்றுகிறேன் 
அது உன்னை மக்களை நோக்கித் திறந்துவிட்டது 
அச்சமே இல்லாமல் 
நான் இப்போது 
என்னுள் கண்டுபிடிக்கிறேன் 
என்னிலும் பெரிய விஷயங்களை 

நன்றி :ஆன் தி இஷ்யூஸ் மேகசின் 

1 comment:

  1. // அச்சமே இல்லாமல்
    நான் இப்போது
    என்னுள் கண்டுபிடிக்கிறேன்
    என்னிலும் பெரிய விஷயங்களை // தேர்ந்தெடுத்த வரிகள். அருமை சார். வாழ்த்துக்கள்.

    ReplyDelete