Sunday, October 10, 2010



காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முதல்வர் கலைஞர்
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் முதல் வீடு ஒப்படைப்பு

குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவேண்டும் என்ற எனது நீண்டநாள் கோரிக்கையைப் பரிசீலித்து முதல்வர் கலைஞர் தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளை அகற்றிவிட்டு இருபத்தொரு லட்சம் கான்க்ரீட் வீடுகளைக் கட்டுகிறத் திட்டத்தை அறிவித்தார். அதன் அடிப்படையில் எனது காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வல்லம்படுகை கிராமத்தில் கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் அந்தத் திட்டத்தை செங்கல் எடுத்துக் கொடுத்துத் துவக்கிவைத்தார்கள். அந்த வீடு இருபத்தொன்பதே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இன்று ( 10.10.2010 ) திருவாரூர் செல்லும் வழியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அந்த வீட்டைப் பார்வையிட்டு அதனைப் பயனாளிக்கு வழங்கி வாழ்த்தினார்கள்.
இந்தத் திட்டத்துக்காகக் குரல் கொடுத்த எனது தொகுதியில் முதல் வீடு கட்டிமுடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தப் பெருமையை காட்டுமன்னார்கோயில் தொகுதிக்கு வழங்கிய மாண்புமிகு துணை முதல்வருக்கும் மாண்புமிகு முதல்வருக்கும் , இதற்காக முயற்சிஎடுத்த மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி.
- ரவிக்குமார்
சட்டமன்ற உறுப்பினர் , காட்டுமன்னார்கோயில் தொகுதி

No comments:

Post a Comment