Saturday, October 16, 2010

தேன்மொழி கவிதை

ஒரு மரணத்தை எப்படி உணர்வது
உறையும் பயத்தோடா
தெவிட்டும் மகிழ்சியோடா
மரணத்திற்கு கோர உருவத்தை
தீட்டிய கைகள் ரசனையற்றவை
மரணத்தை ஸ்நேகிக்க நமக்கு
ஏன் கற்றுத்தரப் படவில்லை
மரணம் தன்னை நிச்சயிக்கிறது
நாம் நிச்சயமின்மைக்குள்
அதை அடைக்கிறோம்
மென்மையாக அலையும்
பூ னையைப் போல் நம்மோடு
தொடர்கிறது
வண்ணங்களின் தீவிரம்
கொண்ட கருமையை கொண்டு
அதை அடையாளப்படுத்தியது
நாகரீகமற்றது
கருமையை வாழ்க்கையோடு
அடையாளம் காண்போம்
மரணத்தை பற்பல வண்ணங்களால்
அடையாளப்படுத்துவோம்
பளிங்கு நீர; போலிருக்கும்
அதன் தோற்றம் நம்மை
பிரதிபலிக்கவில்லையா என்ன
நித்தம் உதிரும் பூக்கள் போல
நிமிடந்தோறும் உதிர்ந்து கொண்டிருக்கிறது
பூக்கள் உதிர;ந்த பின்பு
மரங்களின் அழகு கூடிப்போகிறதே
வசந்தத்தின் நிலாமாடம்வ
மரணத்தை தண்டனை என்று
உச்சரிப்பது கேவலம்
வேற்று கோணத்திலிருந்து நோக்குவோம்
புpறப்பு தண்டனை
இறப்பு விடுதலை
பறவைகளின் விலங்குகளின்
வாழ்க்கை அற்புதமானவை
கோடை மழையில் நனைவதைப் போல
அவை மரணத்தை எதிர்ப்பதில்லை

எததனை பறவைகள்
எத்தனை விலங்குகள் மடிகின்றன
மரணத்திற்கு பயந்து
நாம் வீடு கட்டுகிறோம்
அது சிறைக்கூடம்
பறவை ஒற்றை சிறகை கூட
உதிர;ப்பதில்லை
ராட்சத பறவையோடு
நாம் ஏன் அதை
பறக்கவிட வேண்டும்
முற்றத்தின் மூலையில்
பட்டு ரோஜா செடிபோல் வளர;ப்போம்
மரணத்தைப் போர்வீரன்
நெஞ்சை நிமிர;த்தி ஏற்றுக்கொள்வது
தவறான செயல்பாடு
மண்டியிட்டு தலை குனிந்து
தேவக்குழந்தையை பெற்றுக்கொள்வது போல
நாபிக் குழியிலிருந்து வரவேற்போம்

No comments:

Post a Comment